என் மலர்
நாகப்பட்டினம்
சீர்காழி கடவாசல் குளத்தூர் பகுதியை சேர்ந்த 17 வயது மாணவி ஒருவரை திருக்கருக்காவூர் கிராமத்தை சேர்ந்த கலியபெருமாள் மகன் கார்த்திக் (23) என்பவர் கடந்த 1 வருடமாக ஒரு தலையாக காதலித்து வந்துள்ளார். கூலி தொழிலாளியான கார்த்திக் அந்த பெண்ணிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தி வந்தார்.
இந்த நிலையில் 12-ம் வகுப்பு படித்து முடித்த அந்த மாணவி தனது பெற்றோரிடம் தன்னை ஒருவர் தொந்தரவு செய்வது குறித்து தெரிவித்தார். உடனே பெற்றோர்கள் நீ இனிமேல் கல்லூரிக்கு செல்ல வேண்டாம் என்று கூறிவிட்டனர். இதனால் அந்த மாணவி வீட்டில் இருந்து வந்தார்.
இந்நிலையில் கடந்த 21-ந் தேதி மாணவி வெளியே சென்று வருவதாக கூறி சென்றுள்ளார். அப்போது அங்கு மறைந்திருந்த கார்த்திக் அந்த மாணவியை பிடித்து கட்டாய தாலி கட்ட முயன்றுள்ளார். உடனே மாணவி அதை தட்டி விட்டு வீட்டிற்கு ஓடி வந்து விட்டார். இது குறித்து பெற்றோர்களிடம் கூறியுள்ளார்.
பின்னர் அந்த மாணவியின் பெற்றோர்கள் இந்த சம்பவம் குறித்து சீர்காழி போலீசில் புகார் செய்துள்ளனர். இன்ஸ்பெக்டர் அழகு துரை வழக்குப்பதிவு செய்து பெண் வன் கொடுமை சட்டத்தின் கீழ் கார்திக்கை கைது செய்தார். மாணவிக்கு வாலிபர் கட்டாயமாக தாலி கட்ட முயன்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சீர்காழியை அடுத்த கீழமாத்தூர் காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 35) கூலி தொழிலாளி. இவரது மனைவி மாலதி(25). இவர்களுக்கு திருமணமாகி 2 பெண், 1 ஆண் குழந்தைகள் உள்ளனர்.
ஆறுமுகம் தனது மனைவியின் வீட்டில் தங்கி வந்துள்ளார். இந்நிலையில் அவர் குடித்துவிட்டு மனைவியிடம் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.
இந்தநிலையில் ஆறுமுகம் வீட்டை விட்டு வெளியேறி கீழமாத்தூருக்கு சென்றார். பின்னர் கடந்த 23-ந்தேதி தனது மனைவி வீட்டிற்கு வந்தார். அப்போது மீண்டும் அவருக்கும் மாலதிக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் சம்பவத்தன்று காலை ஆறுமுகம் வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இது குறித்து சீர்காழி இன்ஸ்பெக்டர் அழகுதுரை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார். மேலும் ஆறுமுகம் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தார். பரிசோதனையில் ஆறுமுகத்தின் கழுத்தில் தூக்கு மாட்டியதற்க்கான தடம் இருந்துள்ளது.
இதன் அடிப்படையில் போலீசார் ஆறுமுகத்தை தற்கொலைக்கு தூண்டியதாக மாலதியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மயிலாடுதுறை:
மயிலாடுதுறை அருகே திருமங்கலம் விக்ரமனாற்றின் கரையோரமாக அனுமதி இன்றி ஆற்று மணல் அள்ளப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதன்பேரில் அப்பகுதிக்கு குத்தாலம் இன்ஸ்பெக்டர் ஆனந்த தாண்டவம் மற்றும் போலீசார் சென்றனர். அங்கு 3 டிராக்டரில் மணல் ஏற்றி கொண்டிருந்தனர். உடனே போலீசார் அவர்களை மடக்கி விசாரணை மேற்கொண்டதில் அவர்கள் மயிலாடுதுறை அருகே பொய்கைக்குடி தெற்கு தெரு முத்துசெல்வன் (39), கட்டளைச்சேரி மதியழகன் மகன் கலையரசன் (22), நத்தம் சந்துதெரு ரமேஷ் (30) என்பது தெரியவந்தது.
டிராக்டர் டிரைவர்களான மூவரையும் கைது செய்து 3 டிராக்டரையும் பறிமுதல் செய்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
மயிலாடுதுறை:
மயிலாடுதுறை வட்டம், நெடுமருதூர் புதுத்தெருவைச் சேர்ந்தவர் பாரதிதாசன் (வயது 35) எல்க்ட்ரீசியன். நேற்று மயிலாடுதுறை பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்தது. அப்போது பாரதிதாசன் வீட்டில் மனைவி லதா, தம்பி சுவாமிநாதன் மற்றும் 2 குழந்தைகள் ஆகியோருடன் இருந்துள்ளார்.
அப்போது திடீரென மின்னல் இடி தாக்கியதால் பாரதிதாசனின் வீடு முற்றிலும் எரிந்து நாசமானது. மேலும் பாரதிதாசன், மற்றும் இவரது தம்பி சுவாமிநாதன்(30), மாமனார் ராமசாமி(60) ஆகியோர் காயமடைந்தனர். காயமடைந்த 3 பேரும் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இச்சம்பவம் குறித்து, அறிந்த ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ, தாசில்தார் காந்திமதி ஆகியோர் சென்று சம்பவ இடத்தை பார்வையிட்டனர். மேலும் காயமடைந்தவர்களை அரசு மருத்துவமனையில் சந்தித்து ஆறுதல் கூறினர்.
இது குறித்து சிகிச்சைப் பெற்று வரும் பாரதிதாசன் கூறுகையில்:-
மின்னல் தாக்கியதில், வீட்டில் வைக்கப்பட்டிருந்த வீட்டு உபயோகப் பொருட்கள், 5 பவுன் நகைகள், தம்பியின் திருமண செலவிற்காக வைத்திருந்த ரூ 30 ஆயிரம் பணம் ஆகியவை தீயில் கருகிவிட்டது என்று கூறினர்.
நாகை மாவட்ட ஓய்வு பெற்ற அலுவலர் சங்கம் சார்பாக மயிலாடுதுறை தாசில்தார் அலுவலம் முன்பு 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் ச.பரமசிவம் தலைமை தாங்கினார். மாவட்ட துணைத்தலைவர் த.கலியபெருமாள் வரவேற்றார். இதில் மயிலாடுதுறை, வேதராண்யம், இளந்தோப்பு, செம்மபனார்கோயில், திருமருகல், ஸ்ரீகண்டபுரம், சீர்காழி, திருவெண்காடு பகுதியை சேர்ந்தவர்கள் கலந்துகொண்டனர்.
மாநில அமைப்பு செயலாளர் கண்ணன், மாவட்ட துணைத்தலைவர் உலகநாதன், மாவட்ட பிரச்சாரசெயலாளர் தீனதயாளன், மாவட்ட பொருளாளர் செல்வராஜன் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசு வழங்குவதை போன்று குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.3500ம் மத்திய அரசு வழங்குவதை போல் மருத்துவபடி மாதம்தோறும் 500 வழங்க வேண்டும். ஓய்வுதியம் பெற 20ஆண்டு பணிக்காலம் நிர்ணயம் செய்யவேண்டும். ஓய்வூதியர்களுக்கு அடையாளஅட்டை வழங்கவேண்டும். அரசு பணியாளர்களுக்கு வழங்குவது போன்று ஓய்வூதியதாரர் இறந்தால் அவரது வாரிசுதாரர்களுக்கு குடும்ப பாதுகாப்பு நிதி உதவித்தொகையாக குறைந்தது 3லட்சம் வழங்க வேண்டும்.
அரசு பணியாளர்களுக்கு வழங்குவது போல் ஓய்வூதியர் இறக்க நேர்ந்தால் ஈமசடங்கிற்காக 25ஆயிரம் வழங்க வேண்டும். வருவாய் துறை கிராம அலுவலர்கள் மற்றும் உதவியாளர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியம் 3050வழங்க வேண்டும் மத்தியஅரசு ஊழியர்களுக்கு 7-வது ஊதியகுழு பரிந்துரையின் படி வெளியிடப்படும் மத்திய அரசின் ஆணைகளின் பலன்கள் அனைத்தும் தமிழக அரசு ஓய்வூதியதாரர்களுக்கு எந்தவித குறைவும் இன்றி முழுமையாக வழங்கும் வகையில் அமைய நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் என்பது உள்ளிட்ட 17கோரிக்கைகளை வலியுறுத்தி கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
திருச்சி பெரிய மிளகுபாறையை சேர்ந்தவர் சுப்பிரமணியன் (46). இவரது மனைவி அனுசுயா என்கிற பரிதா (42). இருவரும் வீடு, வீடாக சென்று புடவை வியாபாரம் செய்து வருகின்றனர்.
வியாபார தந்திரமாக ஒரு புடவை, ஒரு ஜோடி கவரிங் வளையல், ஒரு செயின் ஆகியவற்றை ரூ. 550-க்கு வாங்கினால் 15 நாட்களில் 12 சதவீத வட்டிக்கு ரூ. 20 ஆயிரம் கடன் தருவதாக ஆசை வார்த்தை கூறி மோசடியில் ஈடுபட்டு வந்தனர்.
இந்த நிலையில் இருவரும் நாகை மாவட்டம் வேதாரண்யம் பகுதியில் முகாமிட்டு புடவை வியாபாரம் செய்தனர்.
வேதாரண்யம் அகஸ்தியன் பள்ளி கிராமத்துக்கு சென்று பலரிடம் புடவை வியாபாரம் செய்தனர். அப்பகுதியை சேர்ந்த குழந்தைவேல் அவரது மனைவி மாரிமுத்து ஆகியோரிடம் புடவை விற்றுவிட்டு வழக்கம் போல் 15 நாட்களில் கடனாக ரூ. 20 ஆயிரம் கொடுக்கவில்லை.
இதுகுறித்து மாரிமுத்து வேதாரண்யம் போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் ரங்கராஜன் வழக்கு பதிவு செய்து நூதன மோசடியில் ஈடுபட்ட சுப்பிரமணியன், அவரது மனைவி அனுசுயாவை கைது செய்தார்.
அவர்கள் கோர்டடில் ஆஜர்படுத்தப்பட்டு காவலில் வைக்கப்பட்டனர்.
தரங்கம்பாடி:
நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே உள்ள ஆக்கூர் முக்கூட்டு தமிழ் நகர் பகுதியை சேர்ந்தவர் குணசேகரன். மின்வாரியத்தில் போர் மேனாக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர்.
நேற்று இரவு இவர் கீழ் தளத்தில் உள்ள தனது வீட்டை பூட்டி விட்டு மாடியில் உள்ள அறையில் தூங்கினார். இதனை நோட்டமிட்ட கொள்ளை கும்பல் கீழ் தளத்தில் உள்ள கதவின் பூட்டை உடைத்து உள்ளே சென்றது. பின்னர் அங்கிருந்த 2 பீரோவை உடைத்து அதில் வைக்கப்பட்டு இருந்த 40 ஆயிரம் ரொக்கப்பணம் மற்றும் 15 பவுன் நகைகளை கொள்ளையடித்து விட்டு சென்று விட்டனர்.
இன்று காலை எழுந்த குணசேகரன், அவரது மனைவி ஆகியோர் கீழ் தளத்திற்கு வந்தனர். அப்போது கதவு பூட்டு உடைக்கப்பட்டு நகை, பணம் கொள்ளை போய் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர் அவர்கள் வெளியே வந்து சத்தம் போட்டனர்.
இந்த கொள்ளை குறித்து செம்பனார் கோவில் போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் சந்திர சேகரன் அங்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டார். கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு துப்பு துலக்கப்படுகிறது. கொள்ளை கும்பலை போலீசார் தேடி வருகிறார்கள். இந்த கொள்ளை சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரையில் நடைபெற்ற திருமணத்திற்கு சமையல் செய்வதற்காக திருக்குவளை - மணக்குடியிலிருந்து தருமராஜ் (30) என்பவரும், திருத்துறைப்பூண்டி மேலகொற்கை பகுதி ஐயப்பன் (38) என்பவரும் மோட்டார் சைக்கிளில் சென்றனர்.
அப்போது கோடியக்கரை காலனி தெருவிலிருந்து மெயின்ரோட்டிற்கு மோட்டார் சைக்கிளில் வந்த பாலசுப்பிரமணியன் மகன் செந்தில்குமார் என்பவர் இவர்கள் மீது மோதிவிட்டார்.
இதில் ஐயப்பன் பலத்த காயமடைந்து திருவாரூர் அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். தருமராஜ் வெளிநோயாளியாக சிகிச்சை பெற்று வருகிறார். தருமராஜ் கொடுத்த புகாரின் பேரில் வேதாரண்யம் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பழனிவேல் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
தரங்கம்பாடி:
தமிழக பாரதீய ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தர் ராஜன் திருக்கடையூர் கோவிலுக்கு வந்தார். அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
சட்டத்தை இயற்ற கூடிய சட்டமன்றத்தில் போட்டி சட்ட மன்றம் நடத்தியது தவறு என்பதாக நான் கருதுகிறேன். சபாநாயகர் உருவ பொம்மை எரிப்பு அநாகரீகமானது.
சபாநாயகர், எதிர்கட்சி தலைவர் மற்றும் எதிர்கட்சி உறுப்பினர்களை இடை நீக்கம் செய்தது தவறு. சட்ட மன்றத்தில் எதிர் கட்சி தலைவர் மு.க. ஸ்டாலின் செயல்படுவதை விட வெளி நடப்பு செய்யும் நிலை மிகவும் வருத்தம் அளிக்கிறது.
தமிழகத்தில் 20 ஆயிரம் போலீஸ் பணியிடம் காலியாக உள்ளது. இதனை போராட்டம் மூலம் பாரதீய ஜனதா முதல்-அமைச்சர் கவனத்திற்கு கொண்டு சென்றது.
எனவே போலீஸ் பணியிடங்களை நிரப்ப வேண்டும்.3 காவலர்கள் பணி செய்யும் இடத்தில் ஒரு காவலர் தான் உள்ளார். இதனால் மக்களுக்கு பாதுகாப்பு கொடுக்க முடியாமல் போகிறது.
காவலர்கள் தங்கள் பிரச்சினைகளை தீர்த்து கொள்ள சங்கம் அமைத்து கொள்வதில் எந்த தவறும் இல்லை என நான் நினைக்கிறேன். தமிழக - கர்நாடக நீர் பிரச்சினையில் மத்திய நீர் வளத்துறை அமைச்சர் இரு மாநிலங்களும் பாதிக்காத வகையில் சரியான முடிவு எடுத்து சரி செய்வார்.
கடந்த 10 ஆண்டு கால காங்கிரஸ்- தி.மு.க. ஆட்சியில் நதி நீர் பிரச்சினையை தீர்க்காமல் தற்போது விவசாயிகளிடம் சேர்ந்து போராட்டம் நடத்துவது கேலிக்கூத்து. தமிழகத்தில் குளம், ஆறுகளை தூர் வார வேண்டும்.
உள்ளாட்சி தேர்தலில் பலம் பொருந்திய கட்சியாக பாரதீய ஜனதா களம் இறங்கும். மக்களே ஓட்டு போட்டு மேயரை தேர்ந்தெடுக்க வேண்டும்.
கவுன்சிலர்கள் மேயரை தேர்ந்தெடுத்தால் முறைகேடு நடைபெற வாய்ப்பு உள்ளது.
இவ்வாறு தமிழிசை சவுந்தர்ராஜன் கூறினார்.
சீர்காழி:
மயிலாடுதுறையை சேர்ந்த சமூக ஆர்வலர் அப்பர்சுந்தரம் தமிழக முதல்வரின் தனி பிரிவிற்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியுள்ளதாவது:-
நாகை மாவட்டம் வைத்தீஸ்வரன்கோவில்- தென்னலக்குடி செல்லும் 5கி.மீ தூரம் சாலை மிகவும் மோசமாக குண்டும், குழியுமாக உள்ளது. வைத்தீஸ்வரன்கோவிலுக்கு பல்வேறு பகுதிகளிலிருந்து வரும் பக்தர்கள் திருவெண்காடு, கீழபெரும்பள்ளம், பூம்புகார் மற்றும் திருநள்ளாறு, காரைக்கால், நாகப்பட்டினம் செல்ல மேற்கண்ட சாலையைதான் பயன்படுத்தி வருகின்றனர்.
மேலும் வைத்தீஸ்வரன்கோவில் மற்றும் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த பல்வேறு கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள், மாணவ-மாணவிகள் தென்னலக்குடி சாலையை பயன்படுத்தி வருகின்றனர்.தற்போது சூரக்காடு பகுதியில் ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட நூறாண்டுகள் பழமையான பாலம் பழுதடைந்து மாற்றாக புதிய பாலம் கட்டப்பட்டு வரும் நிலையில் கனரக வாகனங்கள் உள்ளிட்டவை போக்குவரத்துக்கு தென்னலக்குடி சாலையை பயன்படுத்திவருகின்றனர். இந்த சாலை கடந்த ஆண்டுதான் அமைக்கப்பட்டது. தரமற்ற சாலையை அமைத்ததால் தற்போது தென்னலக்குடி சாலை பழுதடைந்து மோசமாக உள்ளது.ஆகையால் வைத்தீஸ்வரன் கோவில்-தென்னலக்குடி சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
சீர்காழி:
சீர்காழியை அடுத்த தொடுவாய் கிராமம் தெற்கு தெருவை சேர்ந்தவர் வெள்ளரீசன்(வயது 44). இவர் மீன் பிடிக்கும் தொழில் செய்து வருகிறார்.
இந்நிலையில் இப்பகுதியில் உள்ள மாரியம்மன் கோவில் திருவிழாவில் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. அதை காண வெள்ளரீசன் இரவில் வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் சென்றார்.
பின்னர் 2 மணிக்கு வந்து பார்த்த போது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் வைத்து இருந்த 10 பவுன் நகை மற்றும் 40 ஆயிரம் பணத்தை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரிய வந்தது.
இதே போன்று தொடுவாய், மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் விஜயா(38). இவரும் கோவில் திருவிழாவிற்கு சென்றுவிட்டு வந்து பார்த்த போது வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள் வீட்டில் இருந்த ½ பவுன் மோதிரம் மற்றும் ஆயிரம் ரூபாய் பணத்தையும் திருடி சென்றது தெரிய வந்தது.
இது குறித்து சீர்காழி போலீஸ் இன்ஸ்பெக்டர் அழகுதுரை, குற்றப்பிரிவு போலீசார் வில்சன், வசந்த் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேதாரண்யம்:
வேதாரண்யத்தை அடுத்த பெரியகுத்தகை கிராமத்தைச் சேர்ந்தவர் முருகையன். இவரது மகன் சுபாஷ் (வயது 16). இவர் வேதாரண்யம் சி.க.சு.அரசு மேல்நிலைப்பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வருகிறார்.
சம்பவத்தன்று இவர் பள்ளியை விட்டு சொந்த ஊருக்கு மினி பஸ்சில் சென்று கொண்டிருந்தார். மினி பஸ் பெரியகுத்தகை காளியம்மன் கோவில் நிறுத்தத்தில் நின்ற போது புஷ்பவனத்தைச் சேர்ந்த 3 பேர் பஸ்சில் இருந்த சுபாசை கீழே இறங்க சொல்லி தரக்குறைவாக பேசி கையால் அடித்து தாக்கி உள்ளனர்.
இதுபற்றி சுபாஷ் வேதாரண்யம் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பழனிவேல் வழக்குப்பதிவு செய்து 3 பேரையும் கைது செய்து நாகை கோர்டில் ஆஜர் செய்து கோர்ட் உத்தரவுபடி அவர்களை தஞ்சை இளைஞர் கூர்நோக்கு பள்ளியில் சேர்த்தனர்.






