என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்

உருமாண்டம்பாளையத்தில் எம்.எல்.ஏ. தலைமையில் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்

- டாஸ்மாக் கடைகள் வைக்க எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்.
- பொதுமக்கள் உள்பட 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
கவுண்டம்பாளையம்,
கோவை கவுண்டம்பாளையம் அடுத்த உருமாண்டாம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் 2 டாஸ்மாக் கடைகள் வைக்கப்பட உள்ளதாக தகவல் வெளியானது. இதனை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்துவது என அ.தி.மு.க.வினர் முடிவு செய்தனர்.அதன்படி கவுண்டம்பாளையம் எம்.எல்.ஏ.வும், புறநகர் வடக்கு மாவட்ட செயலாளருமான பி.ஆர்.ஜி.அருண்குமார் தலைமையில் உருமாண்டாம்பாளையம் பஸ் நிலையம் முன்பு இன்று காலை ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பகுதி செயலாளர் வனிதா மணி, வார்டு செயலாளர் பந்தல்வீடு பிரகாஷ், சாந்தி பூஷண் மற்றும் அ.தி.மு.க நிர்வாகிகள், பொதுமக்கள் உள்பட 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.ஆர்ப்பாட்டத்தில் ஆர்.பி.ஜி.அருண்குமார் எம்.எல்.ஏ பேசுகையில், கவுண்டம்பாளையம், உருமாண்டாம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் வயல்வெளிகள், தோட்ட ங்கள் நிறைந்த பகுதிகளில் டாஸ்மாக் கடைகளை அமை க்கக்கூடாது, அப்படி செய்தால் இதனை கண்டித்து அ.தி.மு.க சார்பில் மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என்றார்.
இதுகுறித்து தகவலறிந்த துடியலூர் போலீசார் சம்பவஇடத்துக்கு உடனடியாக வந்து எம்.எல்.ஏ. அருண்குமாரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். தொடர்ந்து அவர்கள் அங்கிருந்து லைந்து சென்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
