search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோமாரி நோய் தடுப்பூசி முகாம்
    X

    கோமாரி நோய் தடுப்பூசி முகாம் நடந்தது.

    கோமாரி நோய் தடுப்பூசி முகாம்

    • 600 கால்நடைகளுக்கு கோமாரி நோய்க்கு எதிரான தடுப்பூசி போடப்பட்டது.
    • நோய்களிருந்து கால்நடைகளை பாதுக்காப்பது எப்படி?

    முத்துப்பேட்டை:

    முத்துப்பேட்டை அடுத்த உப்பூர் கிராமத்தில் கால்நடைதுறை சார்பில் கோமாரி நோய் தடுப்பூசி 3-வது கட்ட முகாம் நடைபெற்றது. முகாமை ஊராட்சி மன்ற தலைவர் அரவிந்தன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.

    கால்நடை மருத்துவர் மகேந்திரன் தலைமையில் டாக்டர்கள் ராஜசேகர், ராஜேஷ் குமார், கால்நடை ஆய்வாளர் நிர்மலா, கால்நடை பராமரிப்பு உதவி ஆய்வாளர்கள் பிரசன்னா, மாதவன், மகாலட்சுமி, வீரமணி சண்முகம் ஆகியோர் அடங்கிய மருத்துவ குழுவினர் கலந்து கொண்டனர்.

    இதில் 600 கால்நடைகளுக்கு கோமாரி நோய்க்கு எதிரான தடுப்பூசி போடப்பட்டது.

    மேலும், நோய்களிருந்து கால்நடைகளை பாதுக்காப்பது எப்படி? பராமரிப்பது எப்படி? உள்ளிட்ட ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

    இதில் மக்கள் பிரதிநிதிகள் மற்றும் கிராம முக்கிய பிரமுகர்கள் உள்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×