என் மலர்
உள்ளூர் செய்திகள்

புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது.
மழை மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
- நிகழ்ச்சியில் தொடர்ந்து வாஸ்து சாந்தி, லஷ்மி ஹோமம், யாகசாலை பூஜைகள் நடைப்பெற்றது.
- கும்பாபிஷேக புனிதநீர் அங்கிருந்த பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் கீழ்வேளூரை அடுத்த காக்கழனியில் பழமை வாய்ந்த மழை மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது.
இக்கோவிலின் அஷ்ட பந்தன கும்பாபிஷேகம் நடைப்பெற்றது. கடந்த 10 -ம் தேதி விக்னேஷ்வர பூஜைகளுடன் துவங்கிய நிகழ்ச்சியில் தொடர்ந்து வாஸ்து சாந்தி லஷ்மி ஹோமம், யாகசாலை பூஜைகள் நடைப்பெற்றது.
அதனை தொடர்ந்து நான்காம் கால யாகசாலை பூஜைகளுடன் மகா பூர்ணாஹுதி நடைப்பெற்று சிறப்பு தீபாரதனைக்கு பிறகு கடம் புறப்பாடு நடைப்பெற்றது.
மங்கல வாத்தியம் முழங்க புனித நீர் அடங்கிய கலசத்தை சிவாச்சாரியர்கள் ஊர்வலமாக எடுத்து வந்து கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு மூலவர் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு கும்பாபிஷேகம் நடைப்பெற்றது.
பின்னர் கும்பாபிஷேக புனித நீர் அங்கிருந்த பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது.
தொடர்ந்து மழை மாரி யம்மன் மற்றும் பெரியாச்சி, கல்லுக்குடியான், காத்தவராயன் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு மகா அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடை ப்பெற்றது.
இதில் திரளான பக்தர்கள் கலந்துக் கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.






