search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நெல்லையப்பர் கோவிலில் 5 ஆயிரம் பெண் பக்தர்களுக்கு மங்கல பொருட்கள் - துணை மேயர்  வழங்கினார்
    X

    நெல்லையப்பர் கோவிலில் 5 ஆயிரம் பெண் பக்தர்களுக்கு மங்கல பொருட்கள் - துணை மேயர் வழங்கினார்

    • வளைகாப்பு திருவிழாவிற்கு வருகை தந்த பெண் பக்தர்கள் 5 ஆயிரம் பேருக்கு மங்கல நாண் உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டது.
    • பக்தர்களுக்கு பிரசாதமாக சர்க்கரை பொங்கல், பூம்பருப்பு வழங்கப்பட்டது.

    நெல்லை:

    நெல்லையப்பர் கோவிலில் ஆடிப்பூர திருவிழாவையொட்டி காந்திமதி அம்பாள் வளைகாப்பு திருவிழாவிற்கு வருகை தந்த பெண் பக்தர்கள் 5 ஆயிரம் பேருக்கு மங்கல நாண், வளையல்கள் 4, மஞ்சள், குங்குமம், வெற்றிலை பாக்கு அடங்கிய தொகுப்பினையும், அனைத்து பக்தர்களுக்கும் அம்பாளின் திருவருட்பிரசாதம், சர்க்கரை பொங்கல், புளியோதரை, தயிர் சாதம் மற்றும் பூம்பருப்பு ஆகியவற்றை பொது மக்களுக்கு மாநகராட்சி துணை மேயர் கே.ஆர். ராஜு தலைமையில் வழங்கப்பட்டது.

    இதில் முசம்மில் அகமது, கவுன்சிலர்கள் கிட்டு என்ற ராமகிருஷ்ணன், ரவிந்தர், மாரியப்பன் உட்பட தி.மு.க. நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர் . இதற்கான ஏற்பாடுகளை தி.மு.க. நெல்லை பகுதி கழக முன்னாள் செயலாளரும், மாநகராட்சி 27-வது வார்டு கவுன்சிலருமான உலகநாதன் செய்திருந்தார்.

    Next Story
    ×