search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விருப்பமனு கொடுத்த தி.மு.க.வினர்
    X

    விருப்பமனு கொடுத்த தி.மு.க.வினர்

    • தி.மு.க. தலைமை கழக அறிவிப்பின்படி கட்சியின் 15-வது பொது தேர்தல் நடந்து வருகிறது.
    • விருப்பமனு மற்றும் மனு கொடுத்தல் நிகழ்ச்சி நடந்தது.

    திருமங்கலம்

    தி.மு.க. தலைமை கழக அறிவிப்பின்படி கட்சியின் 15-வது பொது தேர்தல் நடந்து வருகிறது. இதில் பகுதிகழக தேர்தலில் போட்டியிட விரும்பும் கட்சியினர் விருப்பமனுபெறுதல் மற்றும் மனு தாக்கல்செய்தல் நேற்று தொடங்கியது. மதுரை தெற்குமாவட்ட தி.மு.க. அலுவலகத்தில் திருப்பரங்குன்றம் வடக்கு, தெற்கு, அவனியாபுரம் கிழக்கு, மேற்கு பகுதிகளுக்கான விருப்பமனு மற்றும் மனு கொடுத்தல் நிகழ்ச்சி நடந்தது. தெற்குமாவட்ட செயலாளர் மணிமாறன், தேர்தல் ஆணையாளர் ராசாஅருண்மொழி ஆகியோர் கட்சியினரிடம் இருந்து மனுக்களை கொடுத்தனர். திருப்பரங்குன்றம், அவனியாபுரம் பகுதிகளை சேர்ந்த ஏராளமான தி.மு.க.வினர் கலந்து கொண்டு ஆர்வத்துடன் மனுக்களை பெற்று கொண்டனர்.

    இந்த நிகழ்ச்சியில் தெற்கு மாவட்ட அவைத்தலைவர் நாகராஜன், அணி அமைப்பாளர்கள் மதன்குமார், பாசபிரபு, விமல், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் சுவாமி நாதன், முத்துராமலிங்கம், பொதுக்குழு உறுப்பினர் சிவமுருகன், நகரசெயலாளர் ஸ்ரீதர், பகுதி செயலாளர்கள் கிருஷ்ணபாண்டி, ஈஸ்வரன், சிவா, செந்தாமரைகண்ணன், முன்னாள் ஒன்றிய செயலாளர் ஆதிமூலம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×