search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    புரட்டாசி பெருந்திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது
    X

    புரட்டாசி பெருந்திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது

    • தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாஜலபதி கோவிலில் புரட்டாசி பெருந்திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    • தேரோட்டம் 25-ந்தேதி காலை 9 மணிக்கு மேல் நடைபெறுகிறது.

    மதுரை

    மதுரை தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாஜலபதி கோவிலில் புரட்டாசி பெருந்திருவிழா இன்று தொடங்கியது. இதை யொட்டி காலை 8.15 மணி யளவில் கொடியேற்றம் நடந்தது. ஸ்ரீதேவி- பூதேவி யுடன் பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் காட்சி அளித்தார். சுவாமி- அம்பாளுக்கு பூஜைகள் நடந்தது. தொடர்ந்து இன்று இரவு பெருமாள் அன்ன வாகனத்தில் எழுந்தருளு கிறார்.

    நாளை (18-ந்தேதி) காலை கிருஷ்ணாவதாரம், இரவு சிம்ம வாகனத்தில் எழுந்தருளல், 19-ந்தேதி காலை ராமாவதாரம், இரவு அனுமார் வாகனத்தில் எழுந்தருளல், 20-ந்தேதி காலை கஜேந்திர மோட்சம், இரவு கருட வாகனத்தில் எழுந்தருளல், 21-ந்தேதி காலை ராஜாங்கசேவை, இரவு சேஷ வாகனத்தில் எழுந்தருளல், 22-ந்தேதி காலை காளிங்கநர்த்தனம், மாலை மோகன அவதார நிகழ்ச்சி, இரவு யானை வாகனத்தில் எழுந்தருளல், 23-ந்தேதி காலை சேஷ சயனம், இரவு புஷ்ப விமானத்தில் எழுந்தருளல், 24-ந்தேதி காலை வெண்ணை தாழி, இரவு குதிரை வாகனத்தில் எழுந்தருளல் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.

    முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் 25-ந்தேதி காலை 9 மணிக்கு மேல் நடைபெறுகிறது. அன்று இரவு பெருமாள் பூப்பல் லக்கில் எழுந்தருளுவார். 26-ந்தேதி காலை திருமுக்குளத்தில் தீர்த்தவாரி நடைபெறும். அன்று இரவு பெருமாள் பூச்சப்பரத்தில் எழுந்தருளு கிறார். 27-ந்தேதி காலை, மாலை தெப்ப உற்சவம் நடைபெறும். 28-ந்தேதி உற்சவ சாந்தியுடன் திருவிழா நிறைவுபெறும்.

    இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்து வருகிறது.

    Next Story
    ×