search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பொதுமக்கள் திடீர் மறியல்
    X

    மறியலில் ஈடுபட்ட பெண்களை படத்தில் காணலாம்.

    பொதுமக்கள் திடீர் மறியல்

    • பொதுமக்கள் திடீர் மறியலில் ஈடுபட்டனர்.
    • இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    மேலூர்

    மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டது கச்சிராயன்பட்டி ஊராட்சி. மாங்குளப்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள ஊராட்சியில் முறையாக கண்மாய் பணிகள் நடை பெறவில்லை என்று கூறப்படுகிறது.

    இதில் ஒரு சிலர் தொ டர்ந்து போலி அட்டையுடன் 100 நாள் வேலை திட்டப்பணிக்கு செல்வ தாகவும், அது குறித்து கொட்டாம்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவல கத்தில் பலமுறை முறையிட்டும் எந்த நட வடிக்கையும் மேற்கொள்ள வில்லை என தெரிகிறது.

    ஆகவே இந்த விவகாரத்தில் அதிகாரிகள் முறையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி அந்தப்பகுதி பொதுமக்கள் மதுரை-திருச்சி தேசிய நெடுஞ்சாலை யில் இன்று திடீரெனசாலை மறியலில் ஈடுபட்டனர். ஏராளமான பெண்கள் உள்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் போராட் டத்தில் பங்கேற்றனர்.

    இதுபற்றி தகவலறிந்த கச்சிராயன்பட்டி ஊராட்சி மன்றத்தலைவர் அமிர்தம், ஆண்டிச்சாமி சம்பவ இடத்திற்கு வந்து மறியலில் ஈடுபட்ட பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்ப தாக கூறினர்.

    இதையடுத்து மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். மதுரை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டதால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    Next Story
    ×