என் மலர்
உள்ளூர் செய்திகள்

சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்.
கழிவுநீர் வீட்டுக்குள் புகுந்ததால் பொதுமக்கள் மறியல்
- கழிவுநீர் வீட்டுக்குள் புகுந்ததால் பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர்.
- அரை மணி நேரத்திற்கு மேலாக போக்கு வரத்து பாதிக்கப்பட்டது.
மதுரை
மதுரை அவனியாபுரம் துக்காராம் தெரு, மருத்துவ காலனி பகுதியில் பல மாதங்களாக கழிவுநீர் சாக்கடையை சுத்தம் செய்யாததால் அடைப்பு ஏற்பட்டது. இதனால் கழிவு நீர் வீட்டுக்குள் புகுந்தது.
இதுகுறித்து அந்த பகுதி பொதுமக்கள் மாநகராட்சி அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் எந்த பயனும் இல்லை. இதையடுத்து பொதுமக்கள் இன்று அவனியாபுரம் பஸ் நிலையம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதனால் அரை மணி நேரத்திற்கு மேலாக போக்கு வரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்த அவனி யாபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பார்த்திபன் உத்தரவின் பேரில் சப் இன்ஸ்பெக்டர் திலீபன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பொது மக்கள் கலைந்து செல்ல வலியுறுத்தினார்.
அதற்கு பொதுமக்கள் மறுத்ததால் உதவி பொறி யாளர் செல்வ விநாயகம் விரைந்து வந்து உங்கள் கோரிக்கையை சரி செய்கிறேன். சாக்கடையை சுத்தம் செய்கிறோம் என்று உறுதி அளித்ததின் பேரில் சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.