search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சிறைவாசிகளை நல்வழிப்படுத்த அமைதி கல்வி திட்டம் அறிமுகம்
    X

    சிறைவாசிகளை நல்வழிப்படுத்த அமைதி கல்வி திட்டம் அறிமுகம்

    • மதுரை மத்திய சிறையில் சிறைவாசிகளை நல்வழிப்படுத்த அமைதி கல்வி திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
    • பயிற்சி வகுப்பு அறிமுகப்படுத்தப்பட்டு நடக்கிறது.

    மதுரை

    சிறைவாசிகளை நல்வ–ழிப்படுத்தும் வகையில் பல் வேறு விதமான சீர்தி ருத்த பணிகளை சிறைத்துறை டி.ஜி.பி. அமரேஷ் பூஜாரி மேற்கொண்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக சிறை வாசிகளின் மனதை ஆற்றுப் படுத்தும் விதமாகவும், அவர்களை அமைதிப்ப டுத்தி நல்வழிப்படுத்தும் வகையிலும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    அதன்படி உலக அமைதி பேச்சாளர் பிரேம் ராவத் குழுவினர் மூலமாக தமிழ கம் முழுவதும் உள்ள அனைத்து மத்திய சிறைக ளிலும் அமைதி கல்வி திட்டம் என்ற பெயரில் பயிற்சி வகுப்பு அறிமுகப்ப டுத்தப்பட்டு நடக்கிறது.

    இதில் அமைதி, மதிப்பை உணர்தல், உள் வலிமை, தன்னை உணர்தல், தெளிவு, புரிந்து கொள்ளுதல், தன்மா னம், தேர்ந்தெடுத்தல், நம் பிக்கை, திருப்தி ஆகிய தலைப்பின் கீழ் தினந்தோ றும் 45 நிமிட காணொளி சிறப்பு பயிற்சி வகுப்புகள் கடந்த 3-ந்தேதி தொடங்கி 10 நாட்கள் தொடர்ந்து நடைபெற்று வந்தது.

    இறுதி நாளான நேற்று இப்பயிற்சியில் கலந்து கொண்ட சிறைவாசிகளுக்கு பிரேம் ராவத்தின் இளைஞர் அமைதி அமைப்பின் சார் பாக சான்றிதழ்களை மதுரை சரக சிறைத்துறை துணைத் தலைவர் பழனி மற்றும் மத்திய சிறை கண்கா ணிப்பாளர் பரசுராமன் சிறை அலுவலர் மற்றும் நல அலுவலர்கள் கலந்து கொண்டு மதுரை மத்திய சிறையில் உள்ள ஆண், பெண் சிறைவாசிகள் சுமார் 200 பேருக்கு சான்றி–தழ்களை வழங்கினர்.

    Next Story
    ×