என் மலர்
உள்ளூர் செய்திகள்

வீடு புகுந்து 5 பவுன் நகை திருட்டு
- வீடு புகுந்து 5 பவுன் நகை திருடப்பட்டது.
- கள்ளிக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகிறார்கள்.
திருமங்கலம்
மதுரை மாவட்டம் திருமங்கலம் கள்ளிக்குடி அருகே உள்ள கள்ளிக்குடி சத்திரத்தை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 67), ஓய்வு பெற்ற அரசு பஸ் கண்டக்டர். சம்பவத்தன்று வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் உறவினர் திருமணத்திற்கு சென்று விட்டார். இதை நோட்ட மிட்ட மர்ம நபர்கள் வீட்டின் கதவை உடைத்து பீரோவில் இருந்த 5 பவுன் நகை, 6 வெள்ளி குத்துவிளக்கு, ஒரு வெள்ளி விநாயகர் சிலை ஆகியவற்றை திருடிக் கொண்டு தப்பினர்.
இதுகுறித்து கள்ளிக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகிறார்கள்.
Next Story






