search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    செக்கானூரணி அரசு ஐ.டி.ஐ.யில் பட்டமளிப்பு விழா
    X

    செக்கானூரணி அரசு ஐ.டி.ஐ.யில் பட்டமளிப்பு விழா

    • செக்கானூரணி அரசு ஐ.டி.ஐ.யில் பட்டமளிப்பு விழா நடந்தது.
    • கோச்சடை ஜெ.கே பென்னர் இந்தியா லிமிடெட் செல்வன் தினேஷ் டேவிட்சன் கலந்துகொண்டு மாணவ மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார்.

    மதுரை

    தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை செக்கானூரணி அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 2021- 23-ம் வருடம் வரை தொழிற்பயிற்சிகள் பயின்ற மாணவ, மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா செக்கானூரணியில் நடைபெற்றது. விழாவிற்கு அரசு தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் அசோகன் தலைமை வகித்தார். மண்டல பயிற்சி இணை இயக்குநர் மகேஸ்வரன் முன்னிலை வகித்தார். உடற்பயிற்சி அலுவலர் செல்வராஜன் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக கோச்சடை ஜெ.கே பென்னர் இந்தியா லிமிடெட் செல்வன் தினேஷ் டேவிட்சன் கலந்துகொண்டு மாணவ மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார்.

    விழாவில் மாவட்டத் திறன் அலுவலக உதவி இயக்குநர் செந்தில்குமார், மாவட்ட தொழில் மைய துணை இயக்குநர் ஜெயா, அரசு கள்ளர் கல்லூரி விடுதி காப்பாளர் சிவக்குமார், சாய் பர்னிச்சர் உரிமையாளர் தனசேகரன், பயிற்சி அலுவலர் குபேந்திரன், அலுவலக மேலாளர் ராமச்சந்திரன், லோகோ பைலட் சந்திரசேகர் உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் பயிற்சி அலுவலர் கண்ணன் நன்றி கூறினார்.

    Next Story
    ×