search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆசிரியர்களின் கோரிக்கைகளுக்கு அரசு செவி சாய்க்க வேண்டும்: முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்
    X

    ஆசிரியர்களின் கோரிக்கைகளுக்கு அரசு செவி சாய்க்க வேண்டும்: முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

    • ஆசிரியர்களின் கோரிக்கைகளுக்கு அரசு செவி சாய்க்க வேண்டும்.
    • முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் அறிக்கையில் கூறியிருந்தார்.

    மதுரை

    முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:-

    மக்களுடைய கோரிக்கை கள் எல்லாம் திட்டங்களால் செயல்படுத்துவதற்காக தான் தேர்தல் வாக்குறுதி களை கொடுக்கப்படு கிறது. அதை நம்பித்தான் மக்கள் வாக்களிக்கிறார்கள்.ஆனால் அந்த அடிப்படை தத்துவத்தை இலக்கணத்தை தி.மு.க. அரசு தகர்த்தெறிந்தி ருக்கிறது.

    சம வேலைக்கு, சம ஊதியம் வழங்க வேண்டும் என்று இடைநிலை ஆசிரி யர்கள் மற்றும் கூட்டு நலச் சங்கத்தினர் தொடர்ந்து உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகிறார்கள். கணினி, தையல்பயிற்சி, உடற்பயிற்சி உள்ளிட்ட 8 பிரிவு பகுதி நேர ஆசிரி யர்களை தி.மு.க. ஆட்சிக்கு வந்தால், நிரந்தர ஆசிரி யராக ஆக்குவோம் என்று தேர்தல் வாக்குறுதி கொடுத்தீர்கள்.

    இதை நிறைவேற்ற கோரி தொடர்ந்து ஆசிரி யர்கள் உண்ணாவிரதம் இருந்து வருகிறார்கள். கல்விதான் எதிர்கால சந்ததியை பாதுகாக்கும். அப்படி கல்வியை போதிக் கும் ஆசிரியர்களே இன்றைக்கு உயிரே போனாலும் பரவாயில்லை என்று போராட்டம் நடத்து கிறார்கள்?

    இப்படி 520 தேர்தல் வாக்குறுதிகளுக்கும் போராட்டத்தை நடத்தி னால் தமிழ்நாடு போராட்ட களமாக மாறி விடும். ஒவ்வொரு தேர்தல் வாக்குறுதிக்கும் ஒவ்வொரு பிரிவினர் போராடுகிறார் கள். தேர்தல் வாக்குறுதி களை கொடுத்து அதனை நிறைவேற்றாமல் மக்களை வஞ்சிக்கிற அரசாக திமுக அரசு உள்ளது.

    ஆகவே தான் இந்த 520 தேர்தல் வாக்குறுதிகளும் காகித பூவாக காட்சிய ளிக்கிறது. உண்ணாவிரத அறப்போராட்டத்தை நடத்தி வரும் இந்த ஆசிரியர்கள் போராட் டத்தை கண்டு முதலமைச்சர் அவர்களின் கோரிக்கை களை செவி சாய்த்து கேட்டு நிறைவேற்ற வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×