என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
கஞ்சா விற்ற 8 பேர் கைது
- கஞ்சா விற்ற 8 பேரை கைது செய்தனர்.
- மேலும் அவர்களிடம் இருந்த மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
மதுரை
மதுரை சிலைமான் போலீசார் நேற்று ராமேசுவரம் ரோட்டில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு சந்தேகத்துக்கு இடம் அளிக்கும் வகையில் 3 பேர் நின்றனர்.
எனவே அவர்களிடம் போலீசார் விசாரித்தனர். அப்போது அவர்கள் முன்னுக்குபின் முரணாக பதில் அளித்தனர். இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவர்களது உடைமைகளை சோதனை செய்து பார்த்தனர்.
அப்போது அதில் 550 கிராம் கஞ்சா மற்றும் 720 ரூபாய் ரொக்கம் ஆகியவை இருப்பது தெரியவந்தது. அதனை பறிமுதல் செய்த சிலைமான் போலீசார் 3 பேரையும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்தனர்.
இதில் அவர்கள் தத்தனேரி, காந்தியார் தெரு ஜெகன் மகன் சந்தோஷ்குமார் (வயது 20), ரமேஷ் மகன் மணிகண்டன் (20), புளியங்குளம், பிள்ளையார் கோவில் தெரு முருகானந்தம் மகன் மணிமாறன் (21) என்பது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து கஞ்சா விற்றதாக மேற்கண்ட 3 பேரையும் சிலைமான் போலீசார் கைது செய்தனர்.
மற்றொரு சம்பவம்
மதுரை நாகமலை புதுக்கோட்டை போலீசார் கீழமாத்தூர் பஸ் நிலையம் அருகே ரோந்து சென்றனர். அப்போது அங்கு 2 மோட்டார் சைக்கிள்களில் 3 பேர் பதுங்கி இருப்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து அவர்களை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர். அப்போது அவர்களிடம் 1 கிலோ 200 கிராம் கஞ்சா, 14 ஆயிரத்து 70 ரூபாய் ரொக்கம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
இதனைத்தொடர்ந்து மேற்கண்ட கும்பலிடம் 2 மோட்டார் சைக்கிள்கள், 2 செல்போன்களை பறி முதல் செய்த போலீசார், அவர்களை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்தனர்.
இதில் அவர்கள் சமயநல்லூர், சத்தியமூர்த்தி நகர், முத்துராமலிங்கம் தெரு நாகராஜா (38), சோழவந்தான் பாலகிருஷ்ணன் (26) மேலநாச்சிகுளம், தெற்கு தெரு மருதபாண்டி (31) என்பது தெரியவந்தது.
இதனை தொடர்ந்து மோட்டார் சைக்கிள்களில் கஞ்சாவை கடத்தி வந்ததாக, மேற்கண்ட 3 பேரையும் நாகமலை புதுக்கோட்டை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதேபோல் சேடப்பட்டி போலீசார் பூசலாபுரம் பஸ் நிலையம் அருகே ரோந்து சென்றபோது கஞ்சா விற்றதாக ஸ்ரீவில்லிபுத்தூர், வன்னியம்பட்டி மணி பாண்டி (26), பூசலாபுரம் நாகு மகன் நந்தகுமார் (19) ஆகிய 2 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 500 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்