என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கஞ்சா விற்ற 4 பேர் கைது
    X

    கஞ்சா விற்ற 4 பேர் கைது

    • கஞ்சா விற்ற 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • மோட்டார் சைக்கிளையும் போலீசார் பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர்.

    மதுரை

    வைகை வடகரை எம்.ஜி.ஆர்.பாலம் அருகே கஞ்சா விற்பனை நடைபெறு வதாக செல்லூர் போலீசுக்கு தகவல் கிடைத்தது. அவர்கள் அந்த பகுதியில் ரோந்து சென்று கண்கா ணித்தனர்.அப்போது 2 வாலிபர்கள் கஞ்சா விற்று கொண்டி ருந்தனர். அவர்களை பிடித்து போலீசார் விசாரித்தனர்.

    அதில் அவர்கள் தத்தனேரி கண்மாய்கரை கணேசபுரம் பாண்டி மகன் சுபாஷ் என்ற படையப்பா (வயது23), மதுரை பாக்கியநாதபுரம் ஜோசப் மகன் தினேஷ்குமார் (20) என்பது தெரியவந்தது.

    அவர்களிடம் இருந்து 2 கிலோ 200 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் அவர்களை கைது செய்தனர்.

    பால நாகம்மாள் கோவில் பின்புறம் உள்ள பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக போதைப் பொருள் தடுப்புபிரிவு போலீசுக்கு தகவல் கிடைத்தது. அவர்கள் அந்த பகுதியில் ரோந்து சென்று கண்காணித்தனர். அப்போது அங்கு ஒரு வாலிபர் கஞ்சா விற்று கொண்டிருந்தார்.

    விசாரணையில் அவர் தேனி மாவட்டம் வருசநாடு சிங்கராஜாபுரத்தைச் சேர்ந்த கணேசன் மகன் ராஜசேகர் (28) என்பது தெரியவந்தது. அவரிடம் இருந்து 300 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் அவரை கைது செய்தனர்.

    மேலும் அதே பகுதியில் மோட்டார் சைக்கிளில் வைத்து காசிமாயன் மகன் முருகன்(23) என்பவர் கஞ்சா விற்று கொண்டி ருந்தார். அவரிடம் இருந்து 250 கிராம் கஞ்சாவையும், மோட்டார் சைக்கிளையும் போலீசார் பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர்.

    Next Story
    ×