search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வாலிபர் கொலையில் 3 பேர் கைது
    X

    கொலை வழக்கில் கைதான வாலிபர்கள்.

    வாலிபர் கொலையில் 3 பேர் கைது

    • அவனியாபுரம் அருகே வாலிபர் கொலையில் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • தங்கையின் சாவுக்கு பழி தீர்த்தார்களா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அவனியாபுரம்

    மதுரை அவனியாபுரம் அருகே உள்ள ஈச்சநேரி பகுதியில் காளிதாஸ் என்ற வாலிபர் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

    இந்த கொலை வழக்கு சம்பந்தமாக பெருங்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது காளிதாசின் மனைவி ஒரு மாதத்திற்கு முன்பாக தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதனால் மனைவியின் உறவினர்கள் காளிதாசை கொலை செய்தார்களா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தனர்.

    இந்த நிலையில் இந்த கொலையில் 3 பேர் சம்பந்தப்பட்டு இருப்பது போலீசுக்கு தெரிய வந்தது.அதன் அடிப்படையில் கீரைத்துறை பகுதியை சேர்ந்த காளிதாஸ் மனைவியின் அண்ணன் வழிவிட்டான் மகன் முத்துபாண்டி (27), சுந்தர்ராஜ் மகன் மாரிமுத்து (19), வில்லாபுரத்தை சேர்ந்த செல்வம் மகன் முத்துப்பாண்டி (27) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.தங்கையின் சாவிற்கு பழி தீர்க்க காளிதாசை கொன்றார்களா? என்று கைதான 3 வாலிபர்களிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×