என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்

2 வீடுகளில் பைக் திருடிய 2 பேர் கைது

- வங்கி மேலாளர் உள்பட 2 வீடுகளில் மோட்டார் சைக்கிள் திருடப்பட்டது.
- அவர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை
மதுரை சிந்தாமணி விநாயகர் தெருவை சேர்ந்தவர் செந்தூர்பாண்டி மகன் சண்முக குமார் (வயது36). இவர் அப்பலம் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். வழக்கம்போல் வேலைக்கு சென்றவர் பின்னர் இரவு வீடு திரும்பினார்.
இவருக்கு சொந்தமான மோட்டார் சைக்கிள் வீட்டின் முன்பாக நிறுத்தி விட்டு தூங்கச் சென்றார். அதிகாலை எழுந்து பார்த்த போது அந்த மோட்டார் சைக்கிள் திருடப்பட்டி ருந்ததை கண்டு அதிர்ச்சி யடைந்தார்.
இது குறித்து சண்முக குமார் கீரைத்துரை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிந்தாமணி விநாயகர் தெரு கண்ணன் காலனியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி மகன் விக்னேஷ் (30). இவர் தனியார் வங்கியில் உதவி மேலாளராக வேலை பார்த்து வருகிறார். வழக்கம்போல் வேலைக்குச்சென்று திரும்பியவர் இரவு வீட்டின் முன்பு தனது மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு தூங்கச் சென்றார்.
பின்னர் காலை எழுந்து பார்த்தபோது அந்த மோட்டார் சைக்கிள் திருடப்பட்டிருந்தது. இது குறித்து அவர் கீரைத்துரை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 இடங்களிலும் நடந்த பைக் திருட்டு தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
விசாரணைக்கு பின் திருட்டு ஆசாமிகளை அடையாளம் தெரிந்தது. அதை தொடர்ந்து சிந்தா மணி கண்ணன் காலனியை சேர்ந்த பெரிய கருப்பு மகன் கருப்புசாமி என்ற குதிரை வண்டி (37), திருப்பதி மகன் பாலமுருகன் (26) என்று தெரியவந்தது. அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
