என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
14 கிலோ கஞ்சா பறிமுதல்
- 14 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
- அண்ணாநகர் எஸ்.எம்.பி. காலனியை சேர்ந்த வேல்முருகன் மகன் அர்ஜூன் என்பவரை ேபாலீசார் கைது செய்தனர்.
மதுரை
மதுைர மாநகர் பகுதியில் நாளுக்கு நாள் கஞ்சா விற்பனை அதிகரித்து வருகிறது. இதை தடுக்க போலீசார் பல்வேறு நடவடிக்கை எடுத்தும் பலனில்லை. சமூக விரோதி கள், கல்லூரி மாணவர்கள், இளைஞர்களை குறிவைத்து கஞ்சா விற்பனை செய்து வருகின்றனர்.
கஞ்சா கடத்தல் மற்றும் விற்பனையை தடுக்க ேபாலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வரு கின்றனர். அதன்படி சம்ப வத்தன்று தல்லாகுளம் போலீசார் புதுநத்தம் ரோடு பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்குள்ள ஓம்சக்தி கோவில் அருகே 2 பேர் சந்தேகத்திற்கிடமாக நின்றிருந்தனர்.
அவர்கள் ேபாலீசாரை கண்டதும் தப்ப முயன்றனர். உடனே போலீசார் 2 பேரையும் விரட்டி பிடித்து ேசாதனையிட்டபோது அவர்களிடம் 9 கிலோ கஞ்சா இருந்தது தெரிய வந்தது.
தொடர் விசாரணை யில் அவர்கள் ஆண்டிப்பட்டி கள்ளர் தெருவை சேர்ந்த விருமாண்டி(வயது52), மணியாரம்பட்டி கணேசன்(52) என தெரியவந்தது. 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
மதுரை ஒபுளாபடித்துரை பகுதியில் மதிச்சியம் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு கஞ்சா விற்ற அண்ணாநகர் எஸ்.எம்.பி. காலனியை சேர்ந்த வேல்முருகன் மகன் அர்ஜூன் என்பவரை ேபாலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 5 கிலோ கஞ்சா பறிமுதல் செய்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்