என் மலர்tooltip icon

    கிருஷ்ணகிரி

    • கிரஸர் செல்லும் வழியில் உள்ள குளத்தில் துணிகளை துவைப்பதற்காக சென்றார்.
    • ஆழமான பகுதிக்கு சென்றதால் நீச்சல் தெரியாததால் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டையை அடுத்த நாகிரெட்டிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் வஜ்ராரெட்டி (வயது50).

    கூலித்தொழிலாளியான இவர் நேற்று அன்னியாலம்-சீனிவாசா கிரஸர் செல்லும் வழியில் உள்ள குளத்தில் துணிகளை துவைப்பதற்காக சென்றார். அப்போது அவர் ஆழமான பகுதிக்கு சென்றதால் நீச்சல் தெரியாததால் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதனை கண்ட அக்கம்பக்கத்தினர் தேன்கனிக்கோட்டை போலீஸ் நிலையத்தில் தகவல் தெரிவித்தனர். உடனே போலீசார் அங்கு விரைந்து வந்து வஜ்ரா ரெட்டியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தேன்கனிக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    • மனமுடைந்த காணப்பட்ட கோவிந்தன் வீட்டில் தனியாக இருந்தபோது விஷம் குடித்து மயங்கி கிடந்தார்.
    • சிகிச்சை பெற்று வந்த கோவிந்தன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

    கிருஷ்ணகிரி,

    திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே ஏரிகரை பகுதியைச் சேர்ந்தவர் கோவிந்தன் (வயது50). இவர் கடந்த சில மாதங்களாக கடுமையான வயிற்று வலியால் பாதிக்கப்பட்டார். இதற்காக பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் பலன் அளிக்கவில்லை.

    இதனால் மனமுடைந்த காணப்பட்ட கோவிந்தன் கடந்த 5-ந் தேதி வீட்டில் தனியாக இருந்தபோது விஷம் குடித்து மயங்கி கிடந்தார். உடனே அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த கோவிந்தன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதுகுறித்து கோவிந்தனின் உறவினர் மாது என்பவர் சிங்காரப்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

    கிருஷ்ணகிரி பெத்தனப்பள்ளி வி.ஜ.பி. நகரைச் சேர்ந்தவர் ஆரோக்கியசாமி (வயது64). இவர் அதே பகுதியில் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். இந்த நிலையில் ஆரோக்கியசாமி அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரியில் கண் ஆபேரேசன் செய்து வந்து வீட்டில் இருந்துவந்தார். இதன் காரணமாக அவருக்கு மேலும் உடல்நிலை சரியில்லாமல் போனதாக தெரிகிறது.

    இதனால் மனவேதனையுடன் காணப்பட்ட அவர் நேற்று முன்தினம் வீட்டில் தனியாக இருந்தபோது திடீரென்று தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அவரது மகன் ஆண்ட்ரூஸ் கிருஷ்ணகிரி டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். அந்த புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • உள்ளே செல்லும் பாதை, வெளியே செல்லும் பாதை அமைய உள்ள இடங்களை மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேஸ்வரி நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
    • நேர்முக உதவியாளர் வெங்கடேசன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உடன் இருந்தனர்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் ஜூன் 3-வது வாரத்தில் 29-வது அகில இந்திய மாங்கனி கண்காட்சி விழா நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு மா அரங்குகள், அரசு துறை அரங்குகள், பொழுது போக்கு அம்சங்கள், விழா அரங்கம் அமைக்கப்பட உள்ள இடம், மாங்கனி கண்காட்சிக்கு பொதுமக்கள் உள்ளே செல்லும் பாதை, வெளியே செல்லும் பாதை அமைய உள்ள இடங்களை மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேஸ்வரி நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    அப்போது உதவி கலெக்டர் பாபு, தோட்ட கலைத்துறை இணை இயக்குனர் பூபதி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் வெங்கடேசன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உடன் இருந்தனர்.

    • தங்களுடைய வேலைவாய்ப்பு பதிவு ரத்து செய்யப்படமாட்டாது.
    • சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்று வருகிறது.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரியில் நாளை (வெள்ளிக்கிழமை) தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.

    இது குறித்து மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஒவ்வொரு மாதமும், மாதத்தின் மூனறாம் வெள்ளிக்கிழமை அன்று சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்று வருகிறது.

    அதன்படி, இந்த மாதத்திற்கான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நாளை (வெள்ளிக்கிழமை) காலை 10 மணி அளவில் கிருஷ்ணகிரி வட்டார போக்குவரத்து அலுவலகம் எதிரில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.

    இது ஒரு இலவச பணியே ஆகும். இதனால் தங்களுடைய வேலைவாய்ப்பு பதிவு ரத்து செய்யப்படமாட்டாது என தெரிவித்துக்கொள்கிறேன். இந்த முகாமில் கிருஷ்ணகிரி மற்றும் ஓசூரை சேர்ந்த தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு, தங்கள் நிறுவனத்திற்கு தகுதி உள்ள வேலைதேடுபவர்களை தேர்வு செய்ய உள்ளனர். இதில் எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2, ஐ.டி.ஐ., டிப்ளமோ மற்றும் பட்டப்படிப்பு படித்தவர்கள் தங்களுடைய சுய விவரத்துடன் கலந்து கொண்டு, பயனடையுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • 4 கடைகளில் கலப்பட டீத்தூள், சோப்புத்தூள் விற்பனை செய்தது தெரிய வந்தது.
    • 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    சூளகிரி,

    மும்பையை சேர்ந்தவர் மணிமாறன். பிரபல தனியார் நிறுவன அதிகாரி. இவர் கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி பகுதியில் உள்ள கடைகளில் ஆய்வு மேற்கொண்டார்.

    அதில் பிரபல நிறுவனத்தின் பெயரில் கலப்பட டீத்தூள் மற்றும் சோப்புதூள் உள்ளிட்டவை விற்பனை செய்யப்பட்டு வந்தது தெரிந்தது. சூளகிரி பகுதியில் 4 கடைகளில் கலப்பட டீத்தூள், சோப்புத்தூள் விற்பனை செய்தது தெரிய வந்தது.

    இதுகுறித்து அதிகாரி மணிமாறன் சூளகிரி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரஜினி வழக்குப்பதிவு செய்து, 4 கடைகளில் இருந்தும் ரூ.42 ஆயிரம் மதிப்புள்ள டீத்தூள், சோப்புத்தூள் ஆகியவற்றை பறிமுதல் செய்தார்.

    இதுதொடர்பாக சூளகிரி காமராஜ் நகரை சேர்ந்த கவுதம்ராஜ் (வயது24), சிவா (23), ஏனுசோனை முனிராஜ் (44), அட்டரகானப்பள்ளி நாகராஜ் (38) ஆகிய 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • 50 மாணவ-மாணவிகளுக்கு மலர் சாகுபடி குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.
    • மாணவ-மாணவிகள் தோட்டக்கலை மற்றும் மலர்கள் சாகுபடி பற்றிய விவரங்களை கேட்டு அறிந்தனர்.

    தேன்கனிக்கோட்டை,

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கான கோடை கால சிறப்பு பயிற்சி நடைபெற்று வருகிறது.

    இதையடுத்து இந்திய-இஸ்ரேல் வேளாண்மை திட்டத்தின் கீழ் தளியில் செயல்பட்டு வரும் கொய்மலர் மகத்துவ மையத்தில் ஓசூர் மற்றும் தளி சுற்றியுள்ள அரசு பள்ளிகளை சேர்ந்த 50 மாணவ-மாணவிகளுக்கு மலர் சாகுபடி குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.

    இந்த பயிற்சியில், கிருஷ்ணகிரி மாவட்ட தோட்டக்கலை இணை இயக்குனர் பூபதி கலந்து கொண்டு தோட்டக்கலை சார்ந்த திட்டங்கள், மலர்கள் சாகுபடி, உர மேலாண்மை, அலங்கார செடிகள் வளர்ப்பு மற்றும் உற்பத்தி குறித்து பயிற்சி அளித்தார்.

    அப்போது மாணவ-மாணவிகள் தோட்டக்கலை மற்றும் மலர்கள் சாகுபடி பற்றிய விவரங்களை கேட்டு அறிந்தனர். இந்த பயிற்சியில் தோட்டக்கலை அலுவலர்கள் உடனிருந்தனர்.

    • தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார்.
    • மனமுடைந்து காணப்பட்ட அவர் வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் அடுத்துள்ள மலையாண்டஅள்ளி புதூர் பகுதியை சேர்ந்தவர் ஜோதி (வயது39).இவர் தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். இதனால் மனமுடைந்து காணப்பட்ட அவர் வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இது குறித்து காவேரிப்பட்டணம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 30-க்கும் மேற்பட்ட மாணவர்கள் நேர்முக தேர்வில் கலந்து கொண்டு தேர்வாகினர்.
    • தேர்வான மாணவர் களுக்கு பணி நியமன ஆணைகளை, கல்லூரி முதல்வர் ராஜரத்தினம் வழங்கி, மாணவர் களை பாராட்டினார்.

    ஓசூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அதியமான் பாலிடெக்னிக் கல்லூரியில் 3-ம் ஆண்டு கணினி அறிவியல் படித்த மாணவர்க ளுக்கு கெட்ஸ்டெர் சாப்ட்வேர் என்ற தனியார் நிறுவனம் வேலை வாய்ப்பு முகாம் நடத்தியது. இதில், 30-க்கும் மேற்பட்ட மாணவர்கள் நேர்முக தேர்வில் கலந்து கொண்டு தேர்வாகினர்.

    தேர்வான மாணவர் களுக்கு பணி நியமன ஆணைகளை, கல்லூரி முதல்வர் ராஜரத்தினம் வழங்கி, மாணவர் களை பாரட்டினார்.

    மேலும்,கல்லூரியின் மின்னியல் துறை தலைவர் மற்றும் வேலை வாய்ப்பு அலுவலர் பாலாஜி பிரகாஷ் மற்றும் துறை தலைவர்கள் புவியரசு, நாகராஜன், திவாகர் ஆகியோர் இம்முகாமில் கலந்து கொண்டு மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

    • மாணவியர் சேர்க்கைக்கான மாவட்ட அளவிலான தேர்வுகள் வருகிற 24ம் தேதியன்று கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு வளாகத்தில் நடைபெற உள்ளது.
    • விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

    கிருஷ்ணகிரி,

    2023-24-ம் ஆண்டிற்கான விளையாட்டு விடுதிகளில் பள்ளி மாணவர்கள் சேர்க்கைக்கு இணையதளம் மூலம் விண்ணப்பிக்க 23-ந் தேதி கடைசி நாளாகும்.

    இது குறித்து கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் பள்ளிகளில் படிக்கும்மாணவ, மாணவிகளுக்கு விளையாட்டுத்துறையில் சாதனைகள் புரிவதற்கு ஏற்பவிளையாட்டு பயிற்சி, தங்குமிட வசதி மற்றும் சத்தான உணவுடன் கூடியவிளையாட்டு விடுதிகள் மற்றும் விளையாட்டு பள்ளிகள் சிறப்பாக செயல்பட்டுவருகின்றன.

    மாணவர்களுக்கான விளையாட்டு விடுதிகள், மதுரை, திருச்சி, திருநெல்வேலி, கிருஷ்ணகிரி, கோயம்புத்தூர், கடலூர், தஞ்சாவூர், அரியலூர், தூத்துக்குடி, சிவகங்கை, தேனி, ராமநாதபுரம், உதகமண்டலம், விழுப்புரம், சென்னை, நெய்வேலி மற்றும் நாமக்கல் ஆகிய இடங்களில் செயல்பட்டு வருகின்றன.

    மாணவிகளுக்கான விடுதிகள், ஈரோடு, திருவண்ணாமலை, நாமக்கல், திண்டுக்கல், நாகர்கோவில், பெரம்பலூர், தேனி, புதுக்கோட்டை, தர்மபுரி மற்றும் சென்னை ஆகிய இடங்களில் செயல்பட்டு வருகின்றன. மாணவர்களுக்கான முதன்மை நிலை விளையாட்டு மைய விடுதிகள், சென்னை ஜவகர்லால் நேரு விளையட்டு அரங்கம், திருச்சி (ஸ்ரீரங்கம்) மற்றும் திருநெல்வேலி ஆகிய இடங்களிலும், மாணவியர்களுக்கான முதன்மை நிலை விளையாட்டு மைய விடுதி, சென்னை ஜவகர்லால் நேரு விளையாட்டு அரங்கம் மற்றும் ஈரோடு ஆகிய இடங்களில் செயல்பட்டு வருகின்றன. மாணவ, மாணவிகளுக்கான முதன்மை நிலை விளையாட்டு மைய விடுதி வேலூர் சத்துவாச்சாரியில் செயல்பட்டு வருகிறது.

    2023-24-ம் ஆண்டு விளையாட்டு விடுதி மற்றும் விளையாட்டுப் பள்ளிகளில் 7, 8, 9 மற்றும் 11ம் வகுப்புகளில் மாணவ, மாணவியர் சேர்க்கைக்கான மாவட்ட அளவிலான தேர்வுகள் வருகிற 24ம் தேதியன்று கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு வளாகத்தில் நடைபெற உள்ளது.

    மாணவர்களுக்கான தேர்வுப் போட்டிகள், தடகளம், இறகுப்பந்து, கூடைப்பந்து, குத்துச்சண்டை, கிரிக்கெட், கால்பந்து, வாள்சண்டை, ஜிம்னாஸ்டிக், கைப்பந்து, வளைகோல்பந்து, நீச்சல், டேக்வாண்டோ, கையுந்துபந்து, பளுதூக்குதல், கபாடி, மேசைப்பந்து, டென்னிஸ், ஜுடோ, ஸ்குவாஷ், வில்வித்தை ஆகிய விளையாட்டுகளிலும், மாணவியர்களுக்கான தேர்வு போட்டிகள், தடகளம், இறகுப்பந்து, கூடைப்பந்து, குத்துச்சண்டை, கால்பந்து, வாள்சண்டை, கைப்பந்து, வளைகோல்பந்து, நீச்சல், தேக்வாண்டோ, கையுந்து பந்து, பளுதூக்குதல், கபாடி, டென்னிஸ், ஜுடோ, ஸ்குவாஷ் ஆகிய விளையாட்டு களிலும்நடைபெறும்.

    மாவட்ட, மாநில மற்றும் தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். விளையாட்டில் சிறந்து விளங்கும் மற்றும் ஆர்வம் கொண்டுள்ள மாணவ, மாணவிகள் இணையதள முகவரியில் விளையாட்டு விடுதியில் சேர்வதற்கான படிவத்தினை வருகிற 23-ந் தேதி மாலை 5 மணிக்குள் பூர்த்தி செய்ய வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • 2022-23-ம் கல்வியாண்டில் பயின்ற அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்று 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற பள்ளி என்ற சாதனை படைத்துள்ளனர்.
    • 30 மாணவர்கள் 400 மதிப்பெண்களுக்கு மேல் பெற்று சாதனை படைத்துள்ளனர்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி நாளந்தா இண்டர்நேஷனல் பொதுப்பள்ளியில் 12-ம் வகுப்பு மற்றும் 10ம் வகுப்பில் கடந்த 2022-23-ம் கல்வியாண்டில் பயின்ற அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்று 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற பள்ளி என்ற சாதனை படைத்துள்ளனர்.

    மேலும், இப்பள்ளியில் 12ம் வகுப்பு பயின்ற தினேஷ்ராஜ் என்ற மாணவர் 500க்கு 476 மதிப்பெண்கள் பெற்று கிருஷ்ணகிரி அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.

    இதே போல் இப்பள்ளியில் 12-ம் வகுப்பு பயின்ற 10 மாணவர்கள் 500 க்கு 400 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.

    10-ம் வகுப்பில் பயின்ற மாணவர் ருத்ராட்சம் 500-க்கு 490 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்தனர். மேலும் 30 மாணவர்கள் 400 மதிப்பெண்களுக்கு மேல் பெற்று சாதனை படைத்துள்ளனர். இந்த சாதனை படைத்து பள்ளிக்கும், பெற்றோர்களுக்கும் பெருமை சேர்த்த மாணவர்களை பள்ளியின் நிறுவனர் கொங்கரசன், தாளாளர் சாமுண்டீஸ்வரி, இயக்குனர்கள் கவுதமன், டாக்டர்.புவியரசன் மற்றும் முதல்வர்கள் நினைவுப் பரிசினை வழங்கி வாழ்த்தினர்.

    • அங்கு வந்த பசவராஜ் தரப்பினருக்கும், லட்சுமிதரப்பினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
    • போலீசார் பசவராஜ் (43), கதிர்வேல் (23) ஆகிய 2 பேரை கைது செய்தனர்.

    சூளகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அருகே உத்தனப்பள்ளி பக்கமுள்ளது கொத்தூர். இந்த ஊரை சேர்ந்தவர் லட்சுமி (வயது 33). இவரது சகோதரர் பசவராஜ் (43). இவர்களுக்குள் சொத்து தொடர்பாக பிரச்சினை இருந்து வந்தது.

    இந்த நிலையில் லட்சுமி மற்றும் அவரது குடும்பத்தினர் சகோதரி ராணியம்மாள் வீட்டில் நடந்த நிகழ்ச்சிக்காக பஸ்தலப்பள்ளிக்கு கடந்த 14-ந் தேதி சென்றனர். அப்போது அங்கு வந்த பசவராஜ் தரப்பினருக்கும், லட்சுமிதரப்பினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

    இதில் லட்சுமி, அவரது சகோதரி ராணியம்மாள், திம்மராயப்பா (39), திம்மராஜ் (42), முருகேஷ் (37), கீர்த்தனா (8) ஆகிய 6 பேரும் தாக்கப்பட்டனர்.

    அவர்கள் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இது குறித்து லட்சுமி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் பசவராஜ் (43), கதிர்வேல் (23) ஆகிய 2 பேரை கைது செய்தனர். மேலும் 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    • பாட்டி வீட்டிற்கு சென்று கேட்ட போது அவர் ஏற்கனவே கிழம்பி விட்டதாக கூறினார்.
    • சிங்காரவேலனை போக்சோவில் வழக்கு பதிவு செய்து தருமபுரி கிளை சிறையில் அடைத்தார்.

    தேன்கனிக்கோட்டை,   

    கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகே உள்ள கீரனபள்ளி கிராமத்தை சேர்ந்தவர் 15 வயது மாணவி. இவர் அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.

    சம்பவத்தன்று தேவசானப்பள்ளியில் உள்ள தனது பாட்டி வீட்டிற்கு சென்ற மாணவி நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் சந்தேகமடைந்த மாணவியின் பெற்றோர் பாட்டி வீட்டிற்கு சென்று கேட்ட போது அவர் ஏற்கனவே கிழம்பி விட்டதாக கூறினார்.

    இது குறித்து மாணவியின் பெற்றோர் தனது மகளை அதே பகுதியை சேர்ந்த சிங்காரவேலன் கடத்தி சென்றதாக தேன்கனிக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் இன்ஸ்-பெக்டர் சம்பூரணம் சிங்காரவேலனை போக்சோவில் வழக்கு பதிவு செய்து தருமபுரி கிளை சிறையில் அடைத்தார்.

    ×