search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வெவ்வேறு இடங்களில் ரியல் எஸ்டேட் அதிபர் உள்பட 2 பேர் தற்கொலை
    X

    வெவ்வேறு இடங்களில் ரியல் எஸ்டேட் அதிபர் உள்பட 2 பேர் தற்கொலை

    • மனமுடைந்த காணப்பட்ட கோவிந்தன் வீட்டில் தனியாக இருந்தபோது விஷம் குடித்து மயங்கி கிடந்தார்.
    • சிகிச்சை பெற்று வந்த கோவிந்தன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

    கிருஷ்ணகிரி,

    திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே ஏரிகரை பகுதியைச் சேர்ந்தவர் கோவிந்தன் (வயது50). இவர் கடந்த சில மாதங்களாக கடுமையான வயிற்று வலியால் பாதிக்கப்பட்டார். இதற்காக பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் பலன் அளிக்கவில்லை.

    இதனால் மனமுடைந்த காணப்பட்ட கோவிந்தன் கடந்த 5-ந் தேதி வீட்டில் தனியாக இருந்தபோது விஷம் குடித்து மயங்கி கிடந்தார். உடனே அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த கோவிந்தன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதுகுறித்து கோவிந்தனின் உறவினர் மாது என்பவர் சிங்காரப்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

    கிருஷ்ணகிரி பெத்தனப்பள்ளி வி.ஜ.பி. நகரைச் சேர்ந்தவர் ஆரோக்கியசாமி (வயது64). இவர் அதே பகுதியில் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். இந்த நிலையில் ஆரோக்கியசாமி அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரியில் கண் ஆபேரேசன் செய்து வந்து வீட்டில் இருந்துவந்தார். இதன் காரணமாக அவருக்கு மேலும் உடல்நிலை சரியில்லாமல் போனதாக தெரிகிறது.

    இதனால் மனவேதனையுடன் காணப்பட்ட அவர் நேற்று முன்தினம் வீட்டில் தனியாக இருந்தபோது திடீரென்று தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அவரது மகன் ஆண்ட்ரூஸ் கிருஷ்ணகிரி டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். அந்த புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×