search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குழித்துறை அருகே செண்டைமேள பெண் கலைஞர் தற்கொலை வழக்கில் காதலன் கைது
    X

    கோப்பு படம் 

    குழித்துறை அருகே செண்டைமேள பெண் கலைஞர் தற்கொலை வழக்கில் காதலன் கைது

    • கடந்த 19-ந் தேதி அக்சயா வீட்டில் விஷம் குடித்து மயங்கிய நிலையில் கிடந்தார்.
    • தாயாரை பற்றி ஆபாசமாக அவதூறாக பேசி மிரட்டியதால் மனம் உடைந்து தற்கொலை செய்ததாக தெரிய வந்தது.

    கன்னியாகுமரி:

    குழித்துறையை அடுத்த மருதங்கோடு கழுவந்திட்டை காலனியை சேர்ந்தவர் ஸ்ரீ சுமா. கணவர் பிரிந்து சென்று விட்ட நிலையில் 2 பெண் குழந்தைகளுடன் இவர் வசித்து வந்தார்.

    இவரது இளைய மகள் அக்சயா (வயது 16). செண்டை மேள கலைஞரான இவர் திருமணம் மற்றும் கலை நிகழ்ச்சிகளுக்கு பேண்ட் வாத்தியம் இசைக்கும் வேலை செய்து வந்தார்.

    அப்போது உடன் பணி புரிந்த சுங்கான்கடையை சேர்ந்த சஜின் (24) என்ற வாலிபரை காதலித்து உள்ளார். இந்நிலையில் கடந்த 19-ந் தேதி அக்சயா வீட்டில் விஷம் குடித்து மயங்கிய நிலையில் கிடந்தார். அவரை உறவினர்கள் ஆசாரிபள்ளம் மருத்து வக்கல்லூரி மருத்துவ மனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அக்சயா இறந்தார்.

    இது குறித்து மார்த்தா ண்டம் போலீசில் அக்சயா வின் தாயார் ஸ்ரீசுமா புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.இதில் அக்சயா தற்கொலை செய்வதற்கு முன்பு சஜின், தொலைபேசியில் பேசிய தாகவும், அப்போது அவரது தாயாரை பற்றி ஆபாசமாக அவதூறாக பேசி மிரட்டியதால் தான் மனம் உடைந்து அவர் தற்கொலை செய்ததாகவும் தெரிய வந்தது.

    இதனைத் தொடர்ந்து போலீசார் மேல் விசாரணை நடத்தி சஜினை கைது செய்தனர்.

    Next Story
    ×