என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஈத்தாமொழியில் 14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவர்
- போலீசார் போக்சோ பிரிவில் வழக்குப்பதிவு செய்து விசாரணை
- சிறுமியின் தந்தை, கன்னியாகுமரி அனைத்து மகளிர் போலீசில் புகார்
நாகர்கோவில்:
குமரி மாவட்டம் ஈத்தாமொழியைச் சேர்ந்த 14 வயது சிறுமி அந்தப் பகுதியில் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த கணபதி (வயது 76) என்பவர், சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
இதுகுறித்து சிறுமியின் தந்தை, கன்னியாகுமரி அனைத்து மகளிர் போலீ சில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் போக்சோ பிரிவில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி கணபதியை கைது செய்தனர்.
Next Story






