search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஓடும் பஸ்சில் நகை திருட்டு: சென்னையை சேர்ந்த 2 பெண்கள் கைது
    X

    ஓடும் பஸ்சில் நகை திருட்டு: சென்னையை சேர்ந்த 2 பெண்கள் கைது

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • சேத்தியாதோப்பு குறுக்கு ரோடு அருகே வந்து பார்த்த போது பையில் வைத்திருந்த பர்சை காணவில்லை.
    • போலீசார் 2 பெண்களையும் ஜாமீனில் எடுத்து விசாரணை நடத்தினர்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் புவனகிரியை சேர்ந்த மாலிக்ஜான் மனைவி தில்ஷாத் பேகம். கடந்த மே மாதம் புவனகிரியில் இருந்து வடலூர் நோக்கி தனியார் பஸ்சில் வந்து கொண்டிருந்தார். அப்போது சேத்தியாதோப்பு குறுக்கு ரோடு அருகே வந்து பார்த்த போது பையில் வைத்திருந்த பர்சை காணவில்லை. அதில் 7 பவுன் தங்க நகையை தில்ஷாத் வைத்திருந்தார். இதுகுறித்து சேத்தியாத்தோப்பு போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வந்தனர். இந்நிலையில் விழுப்புரம் மாவட்டம் வளவனூர் பகுதியில் 2 பெண்கள் திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டு கடலூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர்.

    சேத்தியாதோப்பு இன்ஸ்பெக்டர் சேதுபதி, சப்-இன்ஸ்பெக்டர் சந்திரா மற்றும் போலீசார் 2 பெண்களையும் ஜாமீனில் எடுத்து விசாரணை நடத்தினர். இதில் சென்னை பெத்தேரி பகுதியைச் சேர்ந்த சக்திவேல் மனைவி வேளாங்கண்ணி (வயது 26), அதே ஊரைச் சேர்ந்த மாணிக்கம் மனைவி சத்யா (24) என்பது தெரியவந்தது. மேலும், இவ்விருவரும் தில்ஷாத் பேகத்திடமிருந்து 7 பவுன் நகையை திருடியது ஒப்புக்கொண்டனர். அவர்களிடமிருந்து நகையை கைப்பற்றி வழக்கு பதிவு செய்து கடலூர் கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

    Next Story
    ×