search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருச்சியில், நாளை போக்குவரத்து தொழிலாளர்கள் - ஓய்வூதியர்கள் போராட்டம்
    X

    திருச்சியில், நாளை போக்குவரத்து தொழிலாளர்கள் - ஓய்வூதியர்கள் போராட்டம்

    • ஓய்வூதியத்தை அரசே பொறுப்பேற்று வழங்க வேண்டும்.
    • 15-வது ஊதிய ஒப்பந்தம் குறித்து பேச்சுவார்த்தை தொடங்கி புதிய சம்பளம் வழங்க வேண்டும்.

    தஞ்சாவூர்:

    கும்பகோணம் அரசு போக்குவரத்து கழகங்களில் செயல்படும் அனைத்து தொழிற்சங்கங்கள் மற்றும் ஓய்வூதியர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    அரசு போக்குவரத்துக் கழகங்கள் தனது சேவையில் 50 ஆண்டுகால பொன்விழாவை கண்டுள்ளது.

    போக்குவரத்து தொழிலாளர்கள் பணி ஓய்வு பெற்று சுமார் 90 ஆயிரம் பேர் உள்ளனர்.

    இவர்களுக்கு அரசு பொறுப்பேற்று வழங்கும் ஓய்வூதியம் கிடையாது. பிஎப் டிரஸ்ட் மூலம் வழங்கப்படும் ஓய்வூதியத்தை தான் பெற்று வருகின்றனர்.

    இவர்களின் ஓய்வூதியத்தை அரசே பொறுப்பே ற்று வழங்க வேண்டும்.

    பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். 15- வது ஊதிய ஒப்ப ந்தம் குறித்து பேச்சுவார்த்தை தொடங்கி புதிய சம்பளம் வழங்க வேண்டும்.

    ஓட்டுனர், நடத்துனர், தொழில்நுட்ப பணியாளர் உள்ளிட்ட காலி பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்பப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை (வியாழக்கிழமை) மாநிலந்தழுவிய தொடர் முழக்க போராட்டம் திருச்சி போக்குவரத்துக் கழக தலைமை அலுவலகம் முன்பு நடைபெறுகிறது.

    இந்தப் போராட்டத்தை வெற்றிகரமாக நடத்திட கும்பகோணம், திருச்சி, கரூர், புதுக்கோட்டை, காரைக்குடி, நாகப்பட்டினம் ஆகிய கழகங்களில் பணிபுரிந்து வரும் அனைத்து தொழிலாளர்களும், ஓய்வு பெற்ற அனைத்து ஓய்வூதியர்களும் கலந்து கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×