என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
தஞ்சையில், இன்று மாணவர்களுக்கு சிலம்ப போட்டி
- மாணவ- மாணவிகளுக்கு தனித்தனியாக சிலம்ப போட்டி நடத்தப்பட்டது.
- சிறந்த முறையில் சிலம்பம் சுற்றிய மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.
தஞ்சாவூர்:
தஞ்சை அறிஞர் அண்ணா நூற்றாண்டு அரங்கில் இன்று கலைப்புயல் சிலம்பாட்ட பயிற்சி பள்ளி நடத்தும் 3-ம் ஆண்டு சிலம்பப் போட்டி இன்று நடைபெற்றது.
இந்திய குழந்தைகள் நல சங்கம் ஆற்றுப்படுத்துனர் டென்னிஸ் மேரி வரவேற்புரை ஆற்றினார்.
மானோஜிப்பட்டி பள்ளி தலைமை ஆசிரியர் சந்திரமௌலி தலைமை தாங்கினார்.
மேம்பாலம் பள்ளி தலைமை ஆசிரியர் முத்துசாமி முன்னிலை வகித்தார்.
நேரு யுவகேந்திரா துணை இயக்குனர் திருநீலகண்டன், இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டி பொருளாளர் முத்துக்குமார் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.
பேராசிரியர் சுகுமாறன், இந்திய குழந்தைகள் நல சங்கம் நிர்வாக குழு உறுப்பினர் ஜெயக்குமார், கண்காணிப்பாளர் நாராயணசாமி ராஜா, நேரு யுவ கேந்திரா கணக்காளர் பவுன்ராஜ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
இதையடுத்து சிலம்பப் போட்டியை தஞ்சாவூர் மாநகராட்சி மேயர் சண் ராமநாதன் தொடங்கி வைத்தார்.
இதில் தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர் உள்பட பல்வேறு மாவட்ட ங்களை சேர்ந்த 5 வயதுக்கு மேற்பட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இதில் மாணவர், மாணவிகளுக்கு தனி தனியாக சிலம்ப போட்டி நடத்தப்பட்டது.
அவர்கள் ஆர்வத்துடன் சிலம்பம் சுற்றினர். தொடர்ந்து சிலம்ப போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்றது.
போட்டி நடுவராக ஆசான் ஐயப்பன் செயல்பட்டார்.
இதனைத் தொடர்ந்து மாலையில் பாராட்டு விழா மற்றும் சிறந்த சிலம்பாட்ட ஆசான்களுக்கான கலைப்புலி கோவிந்தராஜ் விருது வழங்கும் விழா, ஆண்டு விழா நடைபெற உள்ளது.
இதில் ஆசான்களுக்கான விருதை தமிழ்நாடு சிலம்பாட்ட கழகம் தொழில்நுட்ப குழு சேர்மன் சந்திரசேகரன் வழங்குகிறார். சிறந்த முறையில் சிலம்பம் சுற்றிய மாணவர்களுக்கு பரிசுகளை இந்திய குழந்தைகள் நல சங்கம் கௌரவ செயலாளர் ரகுராமன் வழங்கி பாராட்டுகிறார்.
முடிவில் தஞ்சாவூர் கலைப்புயல் சிலம்பாட்ட பயிற்சி பள்ளி பயிற்சியாளர் துளசிராமன் நன்றி கூறுகிறார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்