என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
கோவையில் திருமணம் ஆகாமல் 'லிவிங் டுகெதர்' வாழ்க்கை வாழ்ந்து 4 முறை கர்ப்பமான இளம்பெண்
- பரத் தனது ஐ.டி. தொழிலை விரிவுபடுத்த வேண்டும் என்று பணம் கேட்டார்
- ரூ.10 லட்சம் கேட்டு மிரட்டிய 5 பேர் மீது கோவை மத்திய அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்
கோவை,
கோவையை சேர்ந்தவர் 26 வயது இளம்பெண்.
இவர் இன்டீரியர் டிசைனராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கோவை ரத்தினபுரியை சேர்ந்த பரத்(30) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.
நாளடைவில் இந்த பழக்கம் காதலாக மலர்ந்தது. இருவரும் செல்போன் எண்களை பரிமாறிக் கொண்டு அடிக்கடி பேசி வந்தனர். இந்த நிலையில் 2 பேரும் ஒன்றாக வாழ முடிவு செய்ததாக தெரிகிறது.
இதையடுத்து இளம்பெண் தனது வீட்டை விட்டு வெளியேறினார். பின்னர் திருமணம் செய்து கொள்ளாமல் பரத்தும், இளம்பெண்ணும் லிவிங் டுகெதர் முறையில் கணவன், மனைவியாக வாழ்ந்து வந்ததாகவும், அதன் மூலம் அந்தப் பெண் 4 முறை கர்ப்பம் அடைந்து கருக்கலைப்பு செய்ததாகவும் கூறப்படுகிறது.
நன்றாக சென்றிருந்த இவர்களது வாழ்க்கையில், பரத் தனது ஐ.டி. தொழிலை விரிவுபடுத்த வேண்டும் என்றும், அதற்கு பணம் வேண்டும் என்றும் கேட்டார். இதுபோன்று பல முறை அவரிடம் பணம் கேட்டதாக தெரிகிறது.
மேலும் பரத்தின் தாயார் சாந்தி இளம் பெண்ணிடம், உங்களுக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என்றால் ரூ. 10 லட்சம் தர வேண்டும். இல்லை யென்றால் எனது மகனுக்கு வேறொரு பெண்ணை பார்த்து திருமணம் செய்து வைத்து விடுவேன் என அடிக்கடி மிரட்டி வந்துள்ளார். இதற்கு வாலிபரின் குடும்பத்தினர் சிலர் உடந்தையாக செயல்ப ட்டுள்ளனர்.
இதனால் மனம் நொந்துபோன இளம்பெண் சம்பவம் குறித்து கோவை மத்திய அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில், போலீசார் பரத், அவரது தாயார் சாந்தி, உறவினர்கள் அருண், ராணி, தினகரன் ஆகிய 5 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்