search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோவை அருகே இளம்பெண்ணின் கழுத்தில் கத்தரிக்கோலால் குத்திய கணவர்
    X

    கோவை அருகே இளம்பெண்ணின் கழுத்தில் கத்தரிக்கோலால் குத்திய கணவர்

    • வேறு வாலிபருடன் பழகியதால் ஆத்திரம்
    • இதுகுறித்து பேரூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கோவை,

    கோவை பேரூர் அருகே உள்ள சுண்டக்காமுத்தூரை சேர்ந்தவர் 23 வயது இளம்பெண். இவருக்கு திருமணமாகி கணவர் மற்றும் ஒரு மகன் உள்ளனர்.

    இந்தநிலையில் இளம்பெண்ணுக்கு கேரள மாநிலத்தை சேர்ந்த வாலிபர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. அடிக்கடி செல்போன் மூலமாக இளம்பெண் அவருடன் பேசி வந்தார். இது இளம்பெண்ணின் கணவருக்கு மனைவி மீது சந்தேகத்தை ஏற்படுத்தியது.

    இதன் காரணமாக கணவன் -மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. சம்பவத்தன்று குடிபோதையில் இருந்த இளம்பெண்ணின் கணவர் தனது மனைவியுடன் பேசும் வாலிபருக்கு தொடர்பு கொண்டு நீ எப்படி எனது மனைவியிடம் பேசலாம் என கேட்டார். அதற்கு அந்த வாலிபர் உன் மனைவியிடமே இதனை கேள் என கூறி செல்போன் இணைப்பை துண்டித்து விட்டார்.

    இதனையடுத்து இளம்பெண்ணின் கணவர் தனது மனைவியை கண்டித்தார். அப்போது அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

    இதில் ஆத்திரம் அடைந்த இளம்பெண்ணின் கணவர் வீட்டில் இருந்த கத்தரிக்கோலை எடுத்து தனது மனைவியின் கழுத்தில் குத்தினார். பின்னர் அங்கு இருந்து தப்பிச் சென்றார்.

    ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய இளம் பெண்ணை அக்கம் பக்கத்தினர் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள். இதுகுறித்து பேரூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வரு கிறார்கள்.

    Next Story
    ×