என் மலர்
உள்ளூர் செய்திகள்

அன்னூர் அருகே மனைவியை தாக்கிய கணவர் கைது
- கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது.
- மகாலட்சுமி கொடுத்த புகாரின் பேரில் அன்னூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மகாலிங்கத்தை கைது செய்தனர்.
மேட்டுப்பாளையம்,
கோவை அன்னூரை அடுத்துள்ள பொன்னேகவுண்டன் புதூரை சேர்ந்தவர் மகாலிங்கம்(43). கூலி தொழிலாளி. இவரது மனைவி மகாலட்சுமி(38). இவர் அங்கு பெட்டிக்கடை வைத்து நடத்தி வருகிறார். இவர்களுக்கு திருமணமாகி குழந்தைகள் உள்ளனர்.
கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது. சம்பவத்தன்று மகாலிங்கம் குடிபோதையில், தனது மனைவி நடத்தி வந்த பெட்டிக்கடைக்கு தீ வைத்தார்.
இதனால் 2 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது அவரது மனைவி சமாதானம் ஆகி சென்று விட்டார். இந்த நிலையில் மீண்டும் மகாலிங்கம் குடித்து விட்டு வந்து தனது மனைவியை தகாத வார்த்தைகளால் பேசி தாக்கியதாக தெரிகிறது.இதுகுறித்து மகாலட்சுமி கொடுத்த புகாரின் பேரில் அன்னூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மகாலிங்கத்தை கைது செய்தனர்.
Next Story






