search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நெல்லை அருகே வீட்டின் பூட்டை உடைத்து 2½ பவுன் நகை திருட்டு
    X

    நெல்லை அருகே வீட்டின் பூட்டை உடைத்து 2½ பவுன் நகை திருட்டு

    • மீனாவின் கணவர் செல்லையா கடந்த 10-ந்தேதிக்கு முன்பு இறந்து விட்டார்.
    • திருட்டு குறித்து மீனா தாழையூத்து போலீசில் புகார் அளித்தார்.

    நெல்லை:

    நெல்லையை அடுத்த தாழையூத்து அருகே உள்ள கீழ தென்கலம் கிழக்கு தெருவை சேர்ந்தவர் செல்லையா. இவரது மனைவி மீனா. செல்லையா கடந்த 10-ந்தேதிக்கு முன்பு இறந்து விட்டார். மீனா தனியாக வசித்து வந்தார். சம்பவத்தன்று அவரை விஷ பூச்சி கடித்து விட்டது. இதனால் நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற அவர் நேற்று வீட்டுக்கு சென்றார்.

    அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு 2½ பவுன் தங்க செயின் திருட்டு போயிருந்தது. இது தொடர்பாக தாழையூத்து போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×