என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
அடையாளம் தெரியாத வாகனம் மோதி ஓட்டல் தொழிலாளி சாவு
Byமாலை மலர்23 Jun 2022 8:53 AM GMT
- ராசிபுரம் அருகே அடையாளம் தெரியாதவர் வாகனம் மோதி தொழிலாளி பலியானார்.
- அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் அவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது.
ராசிபுரம்:
ராசிபுரம் அருகே உள்ள சக்தி நகரைச் சேர்ந்தவர் கந்தசாமி (வயது60). இவர் ராசிபுரம் அருகே உள்ள பட்டணத்தில் ஓட்டலில் மாஸ்டராக வேலை பார்த்து வந்தார். இவர் நேற்று இரவு ஓட்டலில் வேலையை முடித்துக்கொண்டு டவுன் பஸ்சில் வீட்டுக்குச் சென்றார்.
ஆண்டகளூர் கேட் அருகே உள்ள சக்தி நகர் பஸ் நிறுத்தத்தில் இறங்கிய அவர் வீட்டுக்கு செல்வதற்காக ரோட்டை கடந்து சென்றார்.அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் அவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதில் படுகாயமடைந்த கந்தசாமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். விபத்தில் இறந்த கந்தசாமிக்கு பழனியம்மாள் (55) என்ற மனைவியும் ரேவதி (30), மஞ்சுளா (28) என்ற 2 மகள்களும் உள்ளனர். இவர்கள் இருவருக்கும் திருமணம் ஆகிவிட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X