search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அதிமுக தலைமை அலுவலகத்தில் தேசிய கொடி ஏற்றம்
    X

    அதிமுக தலைமை அலுவலகம்

    அதிமுக தலைமை அலுவலகத்தில் தேசிய கொடி ஏற்றம்

    • இல்லந்தோறும் தேசிய கொடியை ஏற்றி வைக்க பிரதமர் கேட்டுக் கொண்டார்.
    • தமிழகமெங்கும் அதிமுகவினர் தேசிய கொடி ஏற்ற எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள்.

    அதிமுக தலைமை அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

    பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, இந்தியத் திருநாட்டின் 75-ஆவது சுதந்திர தினத்தை சிறப்பாகக் கொண்டாடக்கூடிய வகையில், இல்லந்தோறும் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

    அதனையொட்டி, அதிமுக இடைக்காலப் பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ் நாடு முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி, தமிழகமெங்கும் கழக நிர்வாகிகளும், கழகத் தொண்டர்களும், பொதுமக்களும் 13.8.2022 முதல் 15.8.2022 வரை, அவரவர் இல்லங்களில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்த வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்திருந்தார்.

    அதன்படி, தலைமைக் கழகம், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மாளிகை வளாகத்தில் இன்று (13.8.2022) இந்தியத் திருநாட்டின் 75-ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு, கொடிக் கம்பத்தில் தேசியக் கொடி ஏற்றி வைக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது.

    Next Story
    ×