என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
நடிகர் கனல் கண்ணன் கைதை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட முயன்ற இந்து முன்னணியினர் கைது
- நடிகர் கனல் கண்ணன் கைதை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட முயன்ற இந்து முன்னணியினர் கைது செய்யப்பட்டனர்.
- எந்தவித போராட்டத்திற்கும் அனுமதி இல்லை என போலீசார் திட்டவட்டமாக தெரிவித்தனர்.
கடலூர்:
இந்து முன்னணி கலை இயக்கிய மாநில தலைவர் நடிகர் கனல் கண்ணன் கைது செய்த தமிழக அரசை கண்டித்து தமிழக முழுவதும் இந்து முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அறிவித்திருந்தனர். அதன்படி இன்று காலை கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பகுதியில் இந்து முன்னணி மாவட்ட செயலாளர் சக்திவேல் தலைமையில் நிர்வாகிகள் திரண்டனர். அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த கடலூர் போலீஸ் டி.எஸ்.பி. கரிகால் பாரிசங்கர் தலைமையில் போலீசார் இந்து முன்னணி நிர்வாகிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் அனுமதி இல்லாமல் எந்தவித போராட்டத்திற்கும் அனுமதி இல்லை என போலீசார் திட்டவட்டமாக தெரிவித்தனர். ஆனால் போராட்டத்தில் ஈடுபட வந்திருந்த இந்து முன்னணி கலைந்து செல்லாததால் போலீசார் 20 பேரை கைது செய்து கடலூர் தனியார் மண்டபத்திற்கு கொண்டு சென்றனர். அப்போது தமிழக அரசை கண்டித்து இந்து முன்னணியினர் கண்டன கோஷம் எழுப்பி சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்