என் மலர்
உள்ளூர் செய்திகள்

சந்திராயன் 3 விண்கலம் ஏவப்படுவதை நேரில் பார்வையிடும் அரசு பள்ளி மாணவர்கள்
- 2 கிலோ மீட்டர் தொலைவில் இருந்து பாதுகாப்பான முறையில் பார்வையிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
- அதன்பிறகு அங்கு அமைக்கப்பட்டுள்ள மியூசியத்தை பார்வையிடவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கோவை,
நாளை மதியம் சந்திராயன் 3 விண்கலம் ஏவப்பட உள்ளது. இவற்றை 2 கிலோ மீட்டர் தொலைவில் இருந்து பாதுகாப்பான முறையில் பார்வையிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அந்த வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி கோவை மசக்காளிபாளையம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் பயிலும் ஆகா, தீலிபன், நந்தகிஷோர், ஆல்பர், ஜாக்ஸன், மிர்ஜான் அஸ்தியா ஆகிய 5 மாணவர்கள், ஆசிரியர் சக்திவேல், கீரணத்தம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளயில் பயிலும் சாந்தனு, ஹெப்சி, ஏஞ்சல், லத்திகா, ஸ்வீட்டி குமார் ஆகிய 5 மாணவர்கள், ஆசிரியர் ஜெபலான்ஸி டெமிலா ஆகியோர் சந்திராயன் 3 விண்கலம் ஏவப்படும் நிகழ்வைக் காண செல்கின்றனர்.
இன்று இரவு கோவையில் இருந்து சென்னைக்கு ரெயிலில் செல்லும் இவர்கள் சென்னையில் இருந்து வேன் மூலமாக ஸ்ரீஹரிகோட்டா சென்றடைகிறார்.
அங்கு சந்திராயன் 3 விண்கலம் ஏவப்படும் நிகழ்வை பார்வையிடும் மாணவர்கள், அதன்பிறகு அங்கு அமைக்கப்பட்டுள்ள மியூசியத்தை பார்வையிடவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.






