search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தூத்துக்குடியில் 37 பவுன் நகை கொள்ளையில் 7 பேர் கும்பல் கைது
    X

    தூத்துக்குடியில் 37 பவுன் நகை கொள்ளையில் 7 பேர் கும்பல் கைது

    • வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு வீட்டில் இருந்த சுமார் 37 பவுன் தங்க நகைகள் கொள்ளை போனது.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி அய்யாசாமி காலனி 3-வது தெருவை சேர்ந்தவர் அசரியா. இவரது மனைவி எஸ்தர் (வயது 52).இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார்.

    அசரியா இறந்து விட்டதால் வெளிநாட்டில் வசிக்கும் தனது தங்கை கெஸ்த்திதிற்கு சொந்தமான அய்யாசாமி காலனி வீட்டில் வசித்து அவரது 3 குழந்தைகளையும் கவனித்து வருகிறார்.

    இந்த நிலையில் கோவையில் உள்ள உறவினரை பார்ப்பதற்காக எஸ்தர் வீட்டை பூட்டி விட்டு குடும்பத்தினருடன் கோவைக்கு சென்று விட்டு கடந்த 30-ந்தேதி மீண்டும் வீடு திரும்பினார்.

    அப்போது அவர்களது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு வீட்டில் இருந்த சுமார் 37 பவுன் தங்க நகைகள் கொள்ளை போனது. இது தொடர்பான புகாரின் பேரில் சிப்காட் போலீஸ் இன்ஸ்பெக்டர் மோகன் ராஜ், சப்-இன்ஸ்பெக்டர் சண்முகம் மற்றும் தனிப்பிரிவு காவலர்கள் கலைவாணர், பொன்பாண்டி உட்பட போலீசார் தீவிர விசாரணை நடத்தி அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமரா காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்தனர்.

    இதில் தூத்துக்குடி அம்பேத்கர் நகரை சேர்ந்த அருள்ராஜ் என்ற கருவாடு (20), சந்தோஷ்குமார் (21), சந்திரன்(20), ஹரிபிரசாத் (23), சோட்டையன் தோப்பை சேர்ந்த 18 வயதுடைய 2 பேர் மற்றும் ஒரு இளஞ்சிரார் உட்பட 7 பேர் என்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து 7 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் நடத்திய விசாரணையில் இதே போன்று சிப்காட் காவல் சரக பகுதியில் மேலும் 5 வீடுகளில் அவர்கள் திருடியது தெரியவந்தது.

    இதனைத்தொடர்ந்து அவரிடம் இருந்த 60 பவுன் தங்க நகைகளை பறிமுதல் செய்து தொடர்ந்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×