search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வனத்துறையை கண்டித்து  விவசாயிகள் சாலை மறியல்
    X

    வனத்துறையை கண்டித்து விவசாயிகள் சாலை மறியல்

    • பன்றிகள் வருவதை அறிந்து புதரில் மறைந்து கொண்டார்.
    • ஆடுகளை மேய்ச்சலுக்கு அழைத்து சென்றுள்ளார்.

    அன்னூர்

    கோவை மாவட்டம் அன்னூர் புதுப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் செல்வி. இவர் கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டு வரும் நிலையில் தனது ஆடுகளை மேய்ச்சலுக்கு அழைத்து சென்றுள்ளார்.

    அப்போது புதுப்பாளை யம் பகுதியில் உள்ள தரிசு நிலங்களில் ஆடுகள் மேய்ந்து கொண்டிருந்த போது திடீரென அங்கு காட்டு பன்றிகள் கூட்டமாக வந்ததாக கூறப்படுகிறது.கூட்டமாக பன்றிகள் வருவதை அறிந்த செல்வி புதரில் மறைந்து கொண்டார். இந்நிலையில் மேய்ந்து கொண்டிருந்த ஆடுகளை காட்டு பன்றிகள் துரத்தி துரத்தி தாக்கியது.

    இதில் ஒரு ஆட்டுகுட்டி காட்டு பன்றிகள் தாக்கியதில் காயமடைந்து பரிதாபமாக உயிரிழந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த செல்வி இதுகுறித்து அருகில் உள்ளவர்களிடம் தெரிவித்தார்.இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள் ஒருங்கிணை ந்து காட்டுப ன்றிகளை கட்டுபடுத்த தவறிய வனத்துறை கண்டித்து கோவை சத்தி நெடுஞ்சாலையில் பசூர் பகுதியில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.தமிழக விவசாயிகள் சங்க த்தின் சார்பில் நடைப்பெற்ற இந்த போராட்டத்தில் உயிரிழந்த ஆட்டு குட்டியை எடுத்து வந்து காட்டு பன்றிகளினால் உயிருக்கு உத்தரவாதம் இல்லை அதனை தடுக்க வேண்டிய வனத்துறை நடவடிக்கை எடுக்க வில்லை என வனத்துறையை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் கோவை சத்தி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்ப ட்டது.

    பின்னர் இது குறித்து தகவல் அறிந்த அன்னூர் போலீசார் மற்றும் சிறுமுகை வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.இனிமேல் இதுமாதிரியான சம்பவங்களை தடுக்க உரிய நடவடிக்கை எடுப்பதாக வனத்துறை அதிகாரிகள் உறுதி அளித்ததை தொடர்ந்து விவசாயிகள் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பாக காணப்பட்டது.

    Next Story
    ×