என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மோட்டார் சைக்கிள் மோதி விவசாயி பலி
    X

    பலியான விவசாயி ஜெகநாதன்.

    மோட்டார் சைக்கிள் மோதி விவசாயி பலி

    • தஞ்சை மருத்துவகல்லூரி ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
    • மதுக்கூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

    மதுக்கூர்:

    தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை தாலுகா மதுக்கூர் வடக்கு ஊராட்சி சிவன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் ஜெகநாதன் ( வயது 58). விவசாயி. இவருடைய மனைவி மலர். இவருக்கு ஒரு மகள் உள்ளனர். இந்நிலையில் இவர் வீட்டின் அருகில் உள்ள கடைகளுக்கு டீ குடிக்க சென்றார்.

    அப்போது மதுக்கூரில் இருந்து மன்னார்குடி செல்லும் மெயின் ரோட்டில் நடந்து செல்லும் போது மதுக்கூர் வடக்கு சந்தை தோப்பு பகுதியை சேர்ந்த கார்த்திகேயன் (வயது 44) என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் ஜெகநாதன் மீது மோதியது. இதில் அவர் பலத்த காயம் அடைந்தார். உடனே அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு ஜெகநாதன் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

    இது குறித்து ஜெகநாதன் மனைவி மலர் மதுக்கூர் போலீசில் புகார் செய்தார்.அதன் பேரில் மதுக்கூர் போலீசார் வழக்கு பதிவு செய்து இது பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×