search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோவையில் திருமணமான பெண்ணை காதலிக்குமாறு மிரட்டிய முன்னாள் காதலன்
    X

    கோவையில் திருமணமான பெண்ணை காதலிக்குமாறு மிரட்டிய முன்னாள் காதலன்

    • இளம்பெண்ணை பின் தொடர்ந்து சென்ற சரவணகுமார் தன்னை மீண்டும் காதலிக்குமாறு கூறினார்.
    • பெரிய கடை வீதி போலீசார் ஆட்டோ டிரைவர் சரவணகுமாரை கைது செய்தனர்.

    கோவை,

    கோவை ராமநாதபுரம் ஒலம்பஸ் அருகே உள்ள ராமசாமி நகரை சேர்ந்த 20 வயது இளம்பெண். இவர் அந்த பகுதியில் உள்ள கவரிங் கடையில் விற்பனையாளராக வேலை பார்த்து வருகிறார்.

    கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு இளம்பெண்ணுக்கு உக்கடத்தை சேர்ந்த ஆட்டோ டிரைவர் சரவணகுமார் (27) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. 2 பேரும் அடிக்கடி நேரில் சந்தித்தும், செல்போனில் பேசியும் தங்களது காதலை வளர்த்து வந்தனர்.

    இந்தநிலையில் 2 பேருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனையடுத்து இளம்பெண் சரவணகுமாரிடம் பேசுவதையும், பழகுவதையும் தவிர்த்தார். பின்னர் வேறு ஒரு வாலிபருடன் இளம்பெண்ணுக்கு திருமணம் நடந்தது. சில ஆண்டுகளில் அவர்களுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தனர். இதனால் இளம்பெண் தனியாக வசித்து வந்தார்.

    சம்பவத்தன்று அவர் பெரியகடை வீதி வழியாக நடந்து சென்றார். அப்போது இளம்பெண்ணை பின் தொடர்ந்து சென்ற சரவணகுமார் தன்னை மீண்டும் காதலிக்குமாறு கூறினார்.

    அதற்கு இளம்பெண் மறுத்து விட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த அவர் இளம்பெண்ணை மிரட்டி விட்டு அங்கு இருந்து தப்பிச் சென்றார்.

    இது குறித்து பெரிய கடை வீதி போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து இளம்பெண்ணை பின் தொடர்ந்து சென்று காதலிக்குமாறு கூறிய ஆட்டோ டிரைவர் சரவணகுமாரை கைது செய்தனர்.

    பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    Next Story
    ×