என் மலர்tooltip icon

    ஈரோடு

    பாம்பு கடித்து மூதாட்டி பலியான சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரரணை நடத்தி வருகிறார்கள்.
    ஈரோடு:

    பாம்பு கடித்து மூதாட்டி பலியான சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரரணை நடத்தி வருகிறார்கள்.

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த சிக்கரசம்பாளையம், பச்சையம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கண்ணன். இவரது மனைவி ராஜி (வயது 75). கணவன்- மனைவி இருவரும் விவசாயம் செய்து வந்தனர்.

     சம்பவத்தன்று ராஜி பச்சையப்பன் கோவில் தோட்டத்தில் உள்ள தண்ணீர் தொட்டிக்கு தண்ணீர் பிடிக்க சென்றபோது அவரை பாம்பு கடித்தது. 

    இதையடுத்து அவரை சிகிச்சைக்காக உறவினர்கள் சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே ராஜி இறந்து விட்டதாக தெரிவித்தனர். 

    இது குறித்து சத்தியமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஈரோட்டில் நடந்த மெகா தடுப்பூசி முகாமில் 27, 351 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என சுகாதாரத் துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.
    ஈரோடு:

    ஈரோட்டில் நடந்த மெகா தடுப்பூசி முகாமில் 27, 351 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என  சுகாதாரத் துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.


    ஈரோடு மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில், 579 மையங்களில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம் காலை, 9  மணி முதல் மாலை, 5  மணி வரை நடந்தது. இம்முகாமில், 12 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் முதல், இரண்டாம் தவணை தடுப்பூசியும், தகுதியான நபர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசியும் செலுத்தப்பட்டது.

    பள்ளி மாணவ, மாணவியருக்கு, கோர்பிவேக்ஸ், கோவாக்சின் தடுப்பூசியும், பொதுமக்களுக்கு கோவிஷீல்டு, கோவாக்சின் தடுப்பூசியும் செலுத்தப்பட்டது. மொத்தம், 2,316 பணியாளர்கள் இப்பணியில் ஈடுபட்டனர்.

    கலெக்டர் கிருஷ்ணனுண்ணி, ஈரோடு மாநகராட்சி மற்றும் புறநகர பகுதியில் தடுப்பூசி செலுத்தும் பணிகளை ஆய்வு செய்தார்.

    மாவட்ட அளவில் ஒரே நாளில், முதல் தவணை தடுப்பூசி, 5,217 பேருக்கும், இரண்டாம் தவணை தடுப்பூசி, 21,221 பேருக்கும், பூஸ்டர் தடுப்பூசி, 913 பேர் என, 27,351 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்ட சுகாதாரத் துறையினர் தெரிவித்தனர்.

    கருங்கல்பாளையம் அருகே மோட்டார் சைக்கிளில் மது கடத்தி சென்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
    ஈரோடு:

    கருங்கல்பாளையம் அருகே மோட்டார் சைக்கிளில் மது கடத்தி சென்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

    ஈரோடு கருங்கல்பா–ளையம் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது கருங்கல்பா–ளையம் அடுத்த கிருஷ்ண–ம்பாளையம் கமல் நகரில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டி–ருந்தனர்.

     அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் 2 பேர் வந்து கொண்டிருந்தனர். அவர்களது நடவடிக்கை சந்தேகம் அடைந்த போலீசார் அந்த மோட்டார் சைக்கிளை நிறுத்தி சோதனை செய்தனர்.

    சோதனையில் அவர்கள் அனுமதியின்றி மது விற்பனைக்கு கொண்டு சென்றது தெரியவந்தது. விசாரணையில் அவர்கள் சதீஷ்குமார்(31), சண்முகசுந்தரம் (51), என தெரியவந்தது. இது குறித்து கருங்கல்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்தனர். 

    மேலும் அவர்களிடமிருந்து அவர்களிடம் இருந்து 162 மதுபாட்டில்கள், மோட்டார் சைக்கிள்கள் போலீசார் பறிமுதல் செய்தனர்.

    பவானிசாகர் அணையிலிருந்து 205 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
    ஈரோடு:

    பவானிசாகர் அணையிலிருந்து 205 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.


    ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர்பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது. 

    பவானிசாகர் அணையின் மூலம் ஈரோடு, கரூர், திருப்பூர் மாவட்டத்தில் 2 லட்சத்து 47 ஆயிரம் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. 

    கடந்த சில நாட்களாகவே நீர்பிடிப்பு பகுதியில் மழைப்பொழிவு இல்லாததால் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து குறைந்து வருகிறது. மேலும் நீர்வரத்தை காட்டிலும் அணையில் இருந்து பாசனத்துக்காகவும், குடிநீருக்காகவும் அதிக அளவில் தண்ணீர் தொடர்ந்து வெளி யேற்றப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது. 

     இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 80.27 அடியாக உள்ளது. குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 200 கனஅடி நீர் திறந்து விடப்பட்டு வருகிறது. காளிங்கராயன் பாசனத்திற்காக திறக்கப்பட்டு வந்த தண்ணீர் நிறுத்தப்பட்டுள்ளது. 

    இதேபோல் கீழ்பவானி வாய்க்காலுக்கு 5 கன அடி என மொத்தம்  பவானி சாகர் அணையில் இருந்து பாசனத்திற்காக 205 கன அடி வீதம் தண்ணீர் வெளி யேற்றப்பட்டு வருகிறது.
    பவானி அருகே ஓட்டல் ஊழியரை தாக்கிய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
    சித்தோடு:

    பவானி அருகே ஓட்டல் ஊழியரை தாக்கிய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.


    பவானி அருகே உள்ள லட்சுமி நகர் பைபாஸ் பகுதியில் ஒரு ஓட்டல் செயல்பட்டு வருகிறது.  இந்த ஓட்டலுக்கு சம்பவத்தன்று இரவு  2 இளைஞர்கள் சாப்பிடுவதற்காக வந்தனர். அவர்கள் மது போதையில்  இருந்ததாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் ஓட்டல் ஊழியர் வசந்த் என்பவர் அவர்களுக்கு தண்ணீர் கொண்டு வந்து வைத்தார். அப்போது அந்த தண்ணீர் உப்பு தண்ணீராக இருந்ததாக கூறி அவர்கள் ஊழியரிடம் வாக்குவாதம் செய்தனர். தொடர்ந்து அவர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.

    இந்த நிலையில் நேற்று (சனிக்கிழமை) தகராறு செய்த வாலிபர்கள் உள்பட 6 பேர் மீண்டும் அந்த ஓட்டலுக்கு வந்தனர். ெதாடர்ந்து அவர்கள் ஓட்டலில் வேலை செய்து கொண்டு இருந்த ஊழியர்கள் வசந்த் மற்றும் விஜய்யாலன் ஆகியோரிடம் தகராறு செய்து அவர்களை தாக்கியதாக தெரிகிறது.

    இதில் அவர்கள் 2 பேர் காயம் அடைந்தனர். இதனைத் தொடர்ந்து அவர்கள் 2 பேரையும் மீட்டு ஈரோடு அரசு மருத்துவ மனையில் அனுமதி க்கப்பட்டு சகிச்சை பெற்று வருகிறார்கள்.

    இது குறித்து சித்தோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி காளிங்க ராயன்பாளையம் வாய்க்கால் மேடு பகுதியை சேர்ந்த மேகவர்ணன் (25), கவின்குமார் (27), யோகேஷ் பெருமாள் (22), சுதர்சன் (23) ஆகிய 4 பேரை கைது செய்தனர்.

    மேலும் காலிங்க ராயன்பாளையம் பகுதியை சேர்ந்த கார்த்தி (24), சங்கர் (32) ஆகிய 2 பேர் தலைமறைவாகி விட்டனர். அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
    பெருந்துறை அருகே லாரி மீது கார் மோதி 2 பேர் பலியான சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    பெருந்துறை:

    பெருந்துறை அருகே லாரி மீது கார் மோதி 2 பேர் பலியான சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    நாமக்கல் கணபதி நகர் பகுதியை சேர்ந்தவர் சந்தோஷ் சிங்  (38). இவர் தனது மனைவி தாராபாய் (55), மகள்கள் கவிதா (25), காகிதா (12),யோசிகா (2) ஆகியோருடன் காரில் குடும்பத்துடன் அவினாசி யில் உள்ள ஒரு கோவிலுக்கு சென்றனர்.

    அவர்கள் அவினாசியில் இருந்து மீண்டும் நாமக்கல்லுக்கு காரில் வந்து கொண்டு இருந்த னர். சந்தோஷ் சிங் காரை ஓட்டி வந்தார். அவர்கள் பெருந்துறை தேசிய நெடுஞ்சாலை, காஞ்சிகோவில் ரோடு பைபாஸ் அருகே வந்தனர்.  அப்போது அந்த பகுதியில் நிறுத்தி வைக்கபட்டு இருந்த லாரியின் பின் பகுதியில் கார் எதிர்பாராத விதமாக  மோதியது.

    இதில் சம்பவ இடத்தி லேயே சந்தோஷ் சிங் பரிதாபமாக இறந்தார். இதை கண்ட அக்கம்பக்கத்தினர் இருந்தவர்களை மீட்டு ஆம்புலன்சு மூலம்  மீட்டு பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

    ஆனால் செல்லும் வழியிலேயே தாராபாய் இறந்தார். இதில்  படுகாயம் அடைந்த 3 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது  குறித்து பெருந்துறை இன்ஸ்பெக்டர் மசூதா பேகம் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
    ஈரோடு மாவட்டத்தில் வரத்து குறைவு எதிரொலி காரணமாக தக்காளி விலை கிடுகிடு உயர்ந்துள்ளது. இதனால் ஒரு கிலோ ரூ.70-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் வரத்து குறைவு எதிரொலி காரணமாக தக்காளி விலை கிடுகிடு உயர்ந்துள்ளது. இதனால் ஒரு கிலோ ரூ.70-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    ஈரோடு வ.உ.சி. காய்கறி மார்க்கெட்டில் தினமும் ஈரோடு மாவட்டம் தாளவாடி, சத்தியமங்கலம், தாராபுரம், பழனி, திருப்பூர், கிருஷ்ணகிரி, கேரளா போன்ற பகுதியில் இருந்து 10 முதல் 15 டன் வரை தக்காளிகள் வரத்தாகி வந்தன.

    கடந்த மார்ச் மாதம் தக்காளி விளைச்சல் நன்றாக இருந்ததால் வரத்தும் அதிகரித்து காணப்பட்டது. இதனால் ஒரு கிலோ தக்காளி ரூ.10 முதல் 20 வரை விற்பனை செய்யப்பட்டது. பின்னர் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கோடை மழை பெய்ததால் தக்காளி விளைச்சல் குறைந்தது. 

    இதன் காரணமாக மார்க்கெட்டிற்கு தக்காளி வரத்து குறைய தொடங்கியது. தக்காளி வரத்து குறையத் தொடங்கியதால் தக்காளி விலை கிடுகிடுவென உயர தொடங்கியது. தமிழகத்தில் பல்வேறு இடங்களில் தக்காளிக்கு உரிய விலை கிடைக்காததால் விவசாயிகள் தக்காளிகளை பயிரிடவில்லை. இதன் காரணமாகவும் தக்காளி வரத்து குறைய தொடங்கியது.

    ஈரோடு வ.உ.சி காய்கறி மார்க்கெட்டில் தற்போது 4 முதல் 5 டன் தக்காளி மட்டுமே வரத்தாகி வருகிறது. இதன் காரணமாக தக்காளி விலை கிலோவுக்கு தாறுமாறாக உயர்ந்துள்ளது. கடந்த 10 நாட்களாக ஒரு கிலோ தக்காளி ரூ. 50-க்கு  விற்கப்பட்டு வந்தது. இன்று ரூ.20 ரூபாய் அதிகரித்து ஒரு கிலோ தக்காளி சில்லரை விலையில் ரூ.70-க்கு விற்பனையானது. 

    இதனால் இன்று தக்காளி வாங்க வந்த பொதுமக்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். இன்று கிருஷ்ணகிரி மற்றும் கர்நாடக மாநிலம் கோலாரில் இருந்து மட்டும் தக்காளிகள் வந்தன. இன்னும் சில நாட்கள் தக்காளி விலை அதிகமாகத்தான் இருக்கும் என்று வியாபாரிகள் கூறினர்.

    சத்தியமங்கலம் அருகே சேவல் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
    சத்தியமங்கலம்:

    சத்தியமங்கலம் அருகே சேவல் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

    சத்தியமங்கலம் இன்ஸ்பெக்டர் நெப்போலியன் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். 

    அப்போது சிவியார் பாளையத்தில் உள்ள ஒரு தோட்டத்தில் சிலர் கும்பலாக சேவல் வைத்து சூதாட்டத்தில்  ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்.

     போலீசை பார்த்ததும் அந்த கும்பல் தப்பி ஓட முயன்றது. அந்த கும்பலை போலீசார் மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் தேவராஜ் (27), நாகசுபாஷ் (28), பிரகாஷ் (22), சீனிவாசன் (35) என தெரியவந்தது. 

    இதுகுறித்து சத்தியமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து 5 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து சேவல் மற்றும் ரூ.10,500  ரொக்க பணத்தை பறிமுதல் செய்தனர்.
    சென்னிமலை அருகே விவசாயியை கொன்று நகை பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் சென்னிமலை அடுத்த உப்பிலிபாளையம் குட்டக்காட்டு புதூரை சேர்ந்தவர் துரைசாமி(65). இவரது மனைவி ஜெயமணி(62). இருவரும் விவசாயி. இவர்களுக்கு திருமணமான 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். மகள்கள் சென்னிமலையிலும், மகன் கோவையிலும் வசித்து வருகின்றனர். துரைசாமி, ஜெயமணி மட்டும் தனியாக வசித்து வந்தனர்.

    இந்நிலையில், துரைசாமியும், ஜெயமணியும் நேற்று இரவு சாப்பிட்டு விட்டு, வெப்பம் காரணமாக வீட்டினை பூட்டி விட்டு, வீட்டிற்கு வெளியே, அதாவது வீட்டின் வாசலில் 2 கட்டில்களில் போட்டு தனித்தனியாக தூங்கியுள்ளனர். இதைநோட்டமிட்ட மர்மநபர்கள், நள்ளிரவு நேரத்தில் நுழைந்து, தூங்கி கொண்டிருந்த துரைசாமியின் முகத்தில் கூா்மையான ஆயுதத்தால் குத்தியும், வெட்டியும் உள்ளனா்.

    அதைத்தொடர்ந்து ஜெயமணியின் கழுத்தை கத்தியால் அறுத்து, வீட்டினை திறந்து பீரோவை உடைத்து அதில் இருந்த பணத்தையும் பின்னர் ஜெயமணி கழுத்தில் இருந்த தாலி கொடி, துரைசாமி அணிந்திருந்த மோதிரம் என 15 பவுன் நகைகளை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.

    இந்நிலையில், துரைசாமியின் வீட்டில் பால் எடுக்க பால்காரர் இன்று அதிகாலை வந்தபோது, வீட்டின் வாசலில் துரைசாமி கட்டிலில் ரத்த வெள்ளத்தில் கொலை செய்யப்பட்டிருப்பதையும், ஜெயமணி படுகாயத்துடன் உயிருக்கு போராடி கொண்டிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்து, கூச்சல்போட்டுள்ளார்.

    இதுகுறித்து தகவல் அறிந்த சென்னிமலை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் சம்பவ இடத்தில் நேரடியாக ஆய்வு செய்தார்.

    மேலும், போலீஸ் துப்பறியும் மோப்ப நாய் வீரா வரவழைக்கப்பட்டது. ஆனால், யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. கைரேகை மற்றும் தடயவியல் நிபுணர்கள் சம்பவ இடத்தில் மர்மநபர்கள் விட்டு சென்ற தடயங்களை சேகரித்தனர். கொலையாளிகள் துரைசாமியை கடப்பாறை கம்பியால் முகத்தில் தாக்கி, கத்தியால் வெட்டிய காயங்களும் காணப்பட்டது. கடப்பாறையை போலீசார் கைப்பற்றியுள்ளனா்.

    இதுகுறித்து சென்னிமலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

    சென்னிமலை அருகே சரக்கு வேன் கவிழ்ந்து விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    சென்னிமலை:

    சென்னிமலை அருகே சரக்கு வேன் கவிழ்ந்து விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    சென்னிமலையில் இருந்து பெருந்துறை ஆர். எஸ். செல்லும் வழியில் உள்ளது கோரக்காட்டு வலசு. சென்னிமலையில் இருந்து நூல் கோன் பைகளை ஏற்றிய சரக்கு வேன் ஒன்று பெருந்துறை ஆர்.எஸ். ரோடு வழியாக பள்ளிபாளையத்திற்கு சென்றது.

      இந்த வேன் கோரக்காட்டு வலசு அருகே சென்றபோது திடீரென வேனின் டயர் பஞ்சரானது.  இதில் நிலைதடுமாறிய வேன் தலைகுப்புற கவிழ்ந்தது.

     இதில் டிரைவருக்கு லேசான காயம் ஏற்பட்டது. நடுரோட்டில் வேன் கவிழ்ந்ததால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் உடனடியாக இந்த வேனில் இருந்த கோன் பைகளை வேறு வாகனத்தில் ஏற்றி அந்த வேனை எடுத்துச் சென்றனர்.
    காஞ்சிகோவிலில் கல்லூரி மாணவர் மூச்சுத்திணறி உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    பெருந்துறை:

    காஞ்சிகோவிலில் கல்லூரி மாணவர் மூச்சுத்திணறி உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    பெருந்துறை அடுத்துள்ள காஞ்சிகோவில் அறியன் காடு பகுதியை சேர்ந்தவர் பழனிச்சாமி. இவரது மகன் பவிஸ்மித்ரன் (வயது 21). இவர் சித்தோடு அருகே உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.காம். மூன்றாம் ஆண்டு படித்து வந்தார்.

    இவருக்கு கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக உடல் முழுவதும் சிலந்தி நோய் ஏற்பட்டுள்ளது. இதற்காக அவர் சிகிச்சை பெற்று வந்தார்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை  அவர் வீட்டில் இருந்தார். அப்போது அவருக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது.   உடனடியாக அவரை மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். 

    அங்கு அவரை பரிசோ தனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
    இது குறித்து  காஞ்சிக்கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பவானிசாகர் அருகே இளம் பெண் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    ஈரோடு:

    பவானிசாகர் அருகே இளம் பெண் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    பவானிசாகர் அடுத்த முடுக்கன்துறை பகுதியைச் சேர்ந்தவர் உமா. இவருக்கு பிரியா, நந்தினி(25) என 2 மகள்கள் உள்ளனர். மூத்த மகள்  பிரியாவுக்கு மைசூரை  சேர்ந்த கார்த்திக் என்பவருடன் திருமணமாகி வசித்து வருகிறார். 

    2-வது மகள் நந்தினிக்கு  எலத்தூரை  சேர்ந்த ஆனந்தன் என்பவருடன் கடந்த 9 மாதங்களுக்கு முன்பு திருமணமாகி வசித்து வருகிறார். 

    இந்நிலையில் நந்தினிக்கு அடிக்கடி உடல்நிலை சரியில்லாமல் போனது. இதற்காக அவர் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு நந்தினிக்கு தீராத வயிற்று வலி ஏற்பட்டது. வயிற்று வலியால் துடித்த அவரை மைசூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். 

    அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சைக்கு போதிய அளவு பணம் இல்லாததால் நந்தினியை கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்தனர். அங்கு சிகிச்சை பெற்று நேற்று முன்தினம் நந்தினி தனது தாய் வீட்டிற்கு வந்தார். 

    இந்நிலையில் நேற்று நந்தினி தனது தாயிடம் வயிற்றுவலி காரணமாக வாழ்வதைவிட செத்துவிடலாம் என்று கூறி அழுதுள்ளார். அவருக்கு அவரது தாய் உன் வயிற்று வலியை குணப்படுத்தி விடலாம் என்று ஆறுதல் கூறினார். பின்னர் அவரது தாய் வீட்டுக்குப் பின் புறம் துணி துவைக்க சென்றுவிட்டார். பின்னர் மீண்டும் வீட்டுக்கு வந்தபோது நந்தினி வீட்டில் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.  

    அக்கம் பக்கத்தினருக்கு தகவல் சொல்லி அவர்களும் நந்தினியை தேடினர். அப்போது அவரது தாய் வீட்டின் அருகே உள்ள மூர்த்தி என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் உள்ள கிணற்றில் ஒரு பெண்ணின் உடல்  மிதப்பதாக தகவல் கிடைத்தது. 

    இதையடுத்து நந்தினியின் தாய் அங்கு சென்று பார்த்தபோது அது நந்தினி என தெரியவந்தது. நந்தினி வயிற்று வலி காரணமாக கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டதும் தெரியவந்தது.
    இதுகுறித்து பவானிசாகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அந்தியூர் தவுட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சாந்தி (72). இவரது கணவர் 15 வருடத்திற்கு முன்பு இறந்து விட்டார். இவரது ஒரே மகள் மதுரையில் திருமணம் செய்து கொண்டு கணவருடன் வசித்து வருகிறார். சாந்தி மட்டும் தறிப்பட்டறைக்கு வேலைக்கு சென்று வந்தார். 

    இந்நிலையில் கடந்த சில நாட்களாகவே சாந்தி பல்வேறு உடல் உபாதைகளால் அவதி அடைந்து வந்தார். மேலும் இடது கால் பாதத்தில் புண் ஏற்பட்டு வலியால் அவதி அடைந்து வந்தார். மேலும் அவரது மகள் கடந்த ஒரு வருடமாக தன்னை வந்து பார்க்கவில்லை என்று மன வேதனையுடன் இருந்து வந்துள்ளார். 

    இந்நிலையில் மனவேதனை அடைந்த சாந்தி நேற்று வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அந்தியூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து அந்தியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ×