என் மலர்tooltip icon

    ஈரோடு

    தமிழக அரசியலில் 3-வது இடத்தில் காங்கிரஸ் கட்சி உள்ளது என்று கட்சியின் முன்னாள் மாநில தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கூறினார்.
    ஈரோடு :

    சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் ஈரோடு மாவட்டம் அறச்சலூர் அருகே ஓடாநிலையில் உள்ள தீரன் சின்னமலையின் சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதன்பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தீரன் சின்னமலை சிறந்த சுதந்திர போராட்ட வீரர். அவர் வெள்ளையர்களை எதிர்த்து இந்தியா சுதந்திரம் பெற பாடுபட்டவர். அவருடைய பிறந்தநாளையும் அரசு விழாவாக கொண்டாட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். சுதந்திரத்திற்காக தமிழகத்தில் போராடியவர்களின் விவரங்கள் வடமாநிலங்களில் தெரிவதில்லை. எனவே இந்த நிலையை மாற்ற வீரபாண்டிய கட்டபொம்மன், வ.உ.சி. போன்ற சுதந்திர போராட்டத்திற்காக பாடுபட்டவர்களின் பிறந்த நாள் மற்றும் நினைவு நாளை அரசு விழாவாக கொண்டாட வேண்டும்.

    தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியின் பலம் குறையவில்லை. கடந்த பாராளுமன்ற தேர்தலில் 6-வது இடத்தில் காங்கிரஸ் கட்சி இருந்தது. ஆனால் கடந்த சட்டமன்ற தேர்தல் முடிவில் தமிழக அரசியலில் 3-வது இடத்தை காங்கிரஸ் கட்சி பெற்று உள்ளது.

    இவ்வாறு ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கூறினார்.
    நினைவு நாளை போல தீரன் சின்னமலை பிறந்த நாளையும் அரசு கொண்டாடவேண்டும் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
    ஈரோடு:

    தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் இன்று காலை ஈரோடு மாவட்டம் அரச்சலூர் அடுத்த ஓடா நிலையில் உள்ள சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலை சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    தெற்கு மாவட்ட செயலாளர் முத்துசாமி முன்னாள் மத்திய மந்திரி சுப்புலட்சுமி ஜெகதீசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    அப்போது மு.க.ஸ்டாலின் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    சுதந்திர போராட்ட வீரர் கொங்கு மண்டலத்தை சேர்ந்த தீரன்சின்னமலை நினைவு நாளில் அவரது தியாகத்தை போற்றும் வகையில் அவரது சிலைக்கு மாலை அணிவிக்க வந்துள்ளோம்.

    தீரன்சின்னமலையின் சுதந்திர போராட்ட தியாகம் நினைவு கூறத்தக்கது. 2005ம் ஆண்டு மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் தி.மு.க. அங்கம் வகித்தபோது சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலைக்கு தபால்தலை வெளியிடப்பட்டது.

    இதுபோல தமிழகத்தில் தி.மு.க. ஆட்சியின் போது தான் தீரன்சின்ன மலைக்கு சிலை அமைக்கப்பட்டது. தீரன் சின்னமலையின் நினைவு நாளை அரசு விழாவாககொண்டாடுவது போல அவரது பிறந்த நாளையும் அரசு விழாவாக கொண்டாட வேண்டும் என தமிழக அரசை கேட்டுக் கொள்கிறேன்.

    மேலும் தி.மு.க. ஆட்சியில்தான் கொங்கு வேளாளர் சமுதாயம் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்கப்பட்டது.

    இதன்மூலம் கல்வி, வேலை வாய்ப்பிலும் அவர்கள் உயர நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

    விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்று கீழ்பவானி தடப்பள்ளி அரக்கன்கோட்டை வாய்க்காலில் தண்ணீர் திறந்துவிட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இதன்பிறகு அவர் வெள்ளபெத்தாம் பாளையத்தில் உள்ள முன்னாள் எம்.எல்.ஏ.மு.சின்னசாமி நினைவிடத்துக்கு சென்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
    இன்று ஆடிப்பெருக்குடன் ஆடி அமாவாசை மற்றும் குருப்பெயர்ச்சி விழாக்களும் சேர்ந்து வந்ததால் இன்று பவானி கூடுதுறையில் பெருவாரியான பக்தர்கள் குவிந்தனர்.
    ஒவ்வொரு ஆண்டும் ஆடிப்பெருக்கு அன்று ஈரோடு மாவட்டம் பவானி கூடுதுறையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிவார்கள்.

    ஆனால் இன்று ஆடிப்பெருக்குடன் ஆடி அமாவாசை மற்றும் குருப்பெயர்ச்சி விழாக்களும் சேர்ந்து வந்ததால் இன்று பவானி கூடுதுறையில் பெருவாரியான பக்தர்கள் குவிந்தனர்.

    அதிகாலை 5 மணிக்கெல்லாம் உள்ளூர், வெளியூர் மற்றும் வெளி மாவட்ட மக்கள் பவானி கூடுதுறைக்கு வர தொடங்கினர்.

    இவர்கள் பஸ்கள் மற்றும் கார், வேன்களில் வந்தனர். அதிகாலையிலேயே கூடு துறையில் குவிந்து புனித நீராடினர். அதன் பிறகு சங்கமேஸ்வரர் மற்றும் வேத நாயகி அம்மனை வழிபட்டனர்.



    வழக்கம் போல் புதுமண தம்பதிகளும் இன்று பவானி கூடுதுறைக்கு ஜோடி, ஜோடியாக வந்து குவிந்தனர். அவர்கள் புதுமண மாலைகளை காவிரி ஆற்றில் விட்டு காவிரி தாயை வழிபட்டனர்.

    மேலும் ஏராளமான பெண் பக்தர்கள் தங்கள் வீட்டில் வளர்த்து எடுத்து வந்த முளைப்பாரியை காவிரி ஆற்றில் விட்டு தங்கள் வாழ்வு சிறக்க வேண்டி கொண்டனர்.

    திருமணமான பெண்கள் பலர் காவிரியில் நீராடி புது தாலி கயிற்றை கட்டி கொண்டனர்.

    திருமண ஆகாத கன்னி பெண்கள் தங்களுக்கு விரைவில் திருமணம் ஆக வேண்டி கூடுதுறையில் நீராடி வழிபட்டனர்.

    இன்று ஆடி அமாவாசையையொட்டி பலர் இறந்த தங்கள் முன்னோர்களுக்கு திதி கொடுத்தனர். இவர்கள் ஆங்காங்கே கூட்டம் கூட்டமாக அமர்ந்து பூஜை பொருட்கள் மற்றும் பிண்டங்கள் வைத்து பூஜை செய்து தர்ப்பணம் செய்தனர்.

    பிறகு அந்த பிண்டம் மற்றும் பூஜை பொருட்களை காவரி ஆற்றில் விட்டு வழிபட்டனர்.



    ஆடிப்பெருக்கு– ஆடி அமாவாசையையொட்டி பவானி கூடுதுறையில் இந்த ஆண்டு ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். சுமார் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் குவிந்ததால் மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு சிவக்குமார் தலைமையில் 500–க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    காவிரி ஆற்றில் குளிக்கும் போது யாராவது ஆழமான பகுதிக்கு சென்று சிக்கினால் அவர்களை காப்பாற்ற தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீசார் பரிசல்களில் காவிரி ஆற்றில் ரோந்து சென்ற வண்ணம் உள்ளனர்.

    மேலும் ஆழமான பகுதிக்கு யாரும் சென்று விட வேண்டாம் என ஒலி பெருக்கியில் அறிவித்த வண்ணமும் உள்ளனர்.

    கொடுமுடி மகுடேஸ் வரர் கோவிலில் அதிகாலை 4 மணிக்கு பள்ளி யறை பூஜை செய்யப்பட்டு 4.30 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. இதனால் அதிகாலை 3 மணி முதலே ஈரோடு, சேலம், கரூர், திருப்பூர், காங்கயம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்த வண்ணம் இருந்தனர்.

    இவர்கள் கொடுமுடி காவிரி ஆற்றில் குளித்து மகுடேஸ்வரரை வழிப்பட்டனர். இதனால் கோவில் நிர்வாகம் சார்பில் பக்தர்களின் வசதிக்காக சாமியை தரிசனம் செய்ய தடுப்பு கம்பிகள் அமைத்து பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது.

    காவிரி கரையோரம் ஏராளமான பக்தர்கள் ஆற்றில் குளித்து விட்டு தங்கள் முன்னோர்களுக்கு திதி கொடுத்தனர். மேலும் ஏராளமான பெண் பக்தர்கள் முளைப் பாரிகள் எடுத்து காவிரி ஆற்றில் விட்டு வழிபட்டனர். இதனால் அந்த பகுதியில் எங்கு பார்த்தாலும் பக்தர் களின் கூட்டம் அலை மோதியது. எப்போதும் இல்லாமல் இப்போது வழக்கத்தை விட அதிகமான பக்தர்கள் குவிந்தனர்.
    சோதனைகளை தவிடுபொடியாக்கி உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க.வை வெற்றி பெறச்செய்ய வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.
    ஈரோடு:

    சட்டசபை எதிர்கட்சி தலைவரும் தி.மு.க. பொருளாளருமான மு.க.ஸ்டாலின் 2 நாள் சுற்றுப்பயணமாக நேற்று மாலை ஈரோடு வந்தார்.

    ஈரோடு சம்பத்நகர் கொங்கு கலையரங்கில் பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்கள் தி.மு.க.வில் இணையும் விழா நடந்தது. சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தனர்.

    அப்போது மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

    இவ்வளவு கூட்டத்தை இங்கே பார்க்கும் போது பல கட்சியிலிருந்து விலகி தி.மு.க.வில் சேரும் ஒரு சாதாரணமான நிகழ்ச்சி அல்ல. ஒரு மாநாடு போல் உள்ளது. தேர்தலில் நாம் ஆட்சிக்கு வர முடியாவிட்டாலும் அவர்களை தட்டிக்கேட்கும் உரிமையை நாம் பெற்றுள்ளோம்.

    அ.தி.மு.க ஆட்சிக்கு வந்து 3 மாதம் ஆகிறது. ஆனால் சட்டமன்றத்தில் மக்கள் பிரச்சினைகளைப் பற்றி பேச தொடர்ந்து அனுமதி மறுக்கிறார்கள். கவர்னர் உரை மீதான விவாதமும் முடிந்து மானியக்கோரிக்கை நடந்து வருகிறது. நூற்றுக்கும் மேற்பட்ட தீர்மானங்களும் கொண்டு வரப்பட்டுள்ளன. ஆனால் நாங்கள் (தி.மு.க.வினர்) மக்கள் பிரச்சினைகளைப் பற்றி பேச சபாநாயகர் அனுமதி மறுத்து வருகிறார்.

    தி.மு.க,வைப் பொருத்தவரை நாங்கள் ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்களுக்காக குரல் கொடுக்கும் இயக்கமாக உள்ளது.

    இன்று தி.மு.க.வை தேடி இளைஞர்கள் துடிப்புடன் ஆர்வத்துடன் வந்து இணைகிறார்கள். தமிழ் மக்களுக்காக குரல் கொடுக்கும் ஒரே இயக்கம் தி.மு.க.தான் என அவர்கள் உணர்ந்து இருக்கிறார்கள். இப்படி தினமும் இளைஞர்கள், பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்கள் தி.மு.க.வில் இணையும்போது, நாம் ஆட்சிக்கு வர இன்னும் 5 ஆண்டுகள் காத்திருக்கத்தான் வேண்டுமா? இப்போதே தி.மு.க ஆட்சிக்கு வந்து விடுமா? என தமிழக மக்கள் ஆவலுடன் உள்ளனர்.

    அ.தி.மு.க ஆட்சிக்கு வந்து 3 மாதமாகியும் எந்த திட்டமும் செயல்படவில்லை. எரிவாயு குழாய் திட்டத்தால் 6 மாவட்டங்கள் பாதிப்படையும் சூழல் உள்ளது. சட்டசபையில் இது குறித்து நான் பேசியுள்ளேன்.

    திருப்பூர் மாணவன் சரவணன் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் பயிற்சி டாக்டராக இருந்தார். இவர் தற்கொலை செய்துள்ளதாக போலீசார் கூறுகிறார்கள். ஆனால் அவர் திட்டமிட்டு கொலை செய்யப்பட்டதாக அவரது பெற்றோர்கள் கூறுகிறார்கள். இதுபற்றி விசாரணை நடத்த வேண்டுமென்று அவரது பெற்றோர்கள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    மதுரை அவனியாபுரத்தில் மாணவர் லெனின் தற்கொலை செய்து கொண்டார். இதற்கு காரணம் அவர் கல்விகடன் வாங்கியிருந்த வங்கியிலிருந்து அச்சுறுத்தல் வந்ததுதான் காரணம். மேலும் அவரது படிப்பு சான்றிதழ் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதனால் அவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

    தேர்தல் அறிக்கையில் கலைஞர் தி.மு.க ஆட்சிக்கு வந்தால் கல்விக்கடன் ரத்து செய்யப்படும் என அறிவித்திருந்தார். ஆனால் ஆட்சிக்கு வந்து 3மாதமாகியும் அ.தி.மு.க அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    விரைவில் உள்ளாட்சி தேர்தல் வரஉள்ளது. இந்த தேர்தலில் எந்த எதிர்ப்புகள் வந்தாலும் சோதனைகள் வந்தாலும் அதையெல்லாம் தவிடுபொடி ஆக்கி தி.மு.கவை வெற்றி பெறச்செய்ய வேண்டும்.

    முன்னதாக விழாவுக்கு தி.மு.க. மாநில துணை பொதுசெயலாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன் தலைமை தாங்கினார். முன்னாள் அமைச்சர்கள் பொங்கலூர் பழனிசாமி, அந்தியூர் செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஈரோடு தெற்கு மாவட்ட தி.மு.க செயலாளர் முத்துசாமி வரவேற்றார்.

    விழாவில் தி.மு.கவில் இணைந்தவர்களுக்கு மு.க.ஸ்டாலின் மரக்கன்றுகள் வழங்கினார்.
    ஈரோடு பஸ்நிலையத்தில் காதலனுடன் ஓடிவந்த இளம்பெண்ணை போலீசார் மீட்டனர்.
    ஈரோடு:

    திருப்பூர் அருகே கொடுவாயை சேர்ந்த 16 வயது இளம்பெண் திருப்பூரில் உள்ள பனியன் கம்பெனியில் வேலை பார்க்கிறார். அதே பனியன் கம்பெனியில் வேலை பார்க்கும் ஒரு வாலிபரிடம் காதல் கொண்டார். காதல் ஜோடியினர் திடீரென வீட்டை விட்டு வெளியேறினர்.

    அங்கிருந்து ஒரு பஸ் மூலம் ஈரோடு வந்தனர். ஈரோடு வந்த அந்த காதல் ஜோடி எங்கு போவது என்ன செய்வது? என பஸ் நிலையத்தில் அங்கும் இங்கும் சென்றபடி தவித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு ரோந்து பணியில் ஈடுபட்ட போலீசார் அவர்களிடம் விசாரித்தனர். அந்த பெண்ணை ஈரோடு சைல்டு நிறுவனத்திடம் ஒப்படைத்தனர். பிறகு அந்த இளம்பெண்ணின் தந்தையை வரவழைத்து அவரிடம் ஒப்படைத்தனர்.
    ஈரோடு ரெயில் நிலையத்துக்கும் காவேரி ரெயில் நிலையத்துக்கும் இடையே 50 வயதுக்கு மேற்பட்ட முதியவர் ஒருவர் ரெயிலில் அடிபட்டு இறந்து கிடந்தார்.

    ஈரோடு:

    ஈரோடு ரெயில் நிலையத்துக்கும் காவேரி ரெயில் நிலையத்துக்கும் இடையே 50 வயதுக்கு மேற்பட்ட முதியவர் ஒருவர் ரெயிலில் அடிபட்டு இறந்து கிடந்தார். அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்ற விபரம் தெரியவில்லை.

    இறந்து கிடந்தவர் ஒல்லியான உடல் தோற்றத்துடன் மாநிறத்தில் காணப்பட்டார். வெள்ளை மற்றும் ஆரஞ்சு நிறம் கட்டம் போட்ட முழுக்கை சட்டையும் அணிந்திருந்தார்.

    இடது பக்க முதுகில் ஒரு கருப்பு மச்சமும், வலது கை முட்டிக்கு மேல் ஒரு கருப்பு மச்சமும் உள்ளது.

    இறந்து கிடந்தவர் ரெயிலில் இருந்து தவறி விழுந்து இறந்தாரா? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா? என்றும் தெரியவில்லை.

    இது குறித்து ஈரோடு ரெயில்வே போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

    மக்கள் சிந்தனை பேரவை சார்பில் ஈரோடு வ.உ.சி. பூங்காவில் புத்தக திருவிழா வரும் 5-ந்தேதி தொடங்கி வரும் 16-ந்தேதி வரை நடைபெறுகிறது. விழாவை கலெக்டர் பிரபாகர் தொடங்கி வைக்கிறார்.
    ஈரோடு:

    மக்கள் சிந்தனை பேரவை சார்பில் ஈரோடு வ.உ.சி. பூங்காவில் புத்தக திருவிழா வரும் 5-ந்தேதி (வெள்ளிக்கிழமை) தொடங்கி வரும் 16-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) வரை நடைபெறுகிறது.

    இதில் 230 புத்தக அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது. தினமும் காலை 11 மணி முதல் இரவு 9.30 மணி வரை புத்தக விழா நடைபெறும்.

    வரும் 5-ந்தேதி தொடங்கும் விழாவை கலெக்டர் பிரபாகர் தொடங்கி வைக்கிறார். மக்கள் சிந்தனை பேரவை தலைவர் ஸ்டாலின் குணசேகரன் அறிமுக உரையாற்றுகிறார். உலக பேரமைப்பு தலைவர் பழ.நெடுமாறன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உலக தமிழ் படைப்பரங்கை திறந்து வைத்து பேசுகிறார். சென்னை மற்றும் மதுரை பல்கலைக்கழக துணை வேந்தர் பொன்னுசாமி புத்தக அரங்கை திறந்து வைத்து பேசுகிறார்.

    வரும் 6-ந் தேதி ‘‘நிறம் மாறிய பூக்கள்’’ என்ற தலைப்பில் ஐஏஎஸ் அதிகாரி உதயச்சந்திரன் பேசுகிறார். 7-ந் தேதி ‘‘இதிகாசங்கள் வலியுறுத்தும் ஒற்றுமை’’ என்ற தலைப்பில் நடிகர் சிவக்குமார் பேசுகிறார். 8-ந் தேதி இலங்கை ஜெயராமன் வள்ளுவ வரம் என்ற தலைப்பிலும், 9-ந் தேதி நாகப்பன், 10-ந் தேதி வைத்திய நதான், 11-ந் தேதி நடிகர் பாக்யராஜ், 12-ந் தேதி தந்தி டி.வி. முதன்மை செய்தியாளர் ரங்கராஜ் பாண்டே ஆகியோர் கலந்து கொண்டு பல்வேறு தலைப்புகளில் பேசுகிறார்கள்.

    வரும் 13-ந்தேதி கவிஞர் நந்தலாலா தலைமையில் ‘‘கலையும் இலக்கியமும் மக்களுக்கு விருந்தாகவே.. மருந்தாகவே...’’ என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடக்கிறது.

    வரும் 14-ந் தேதி மலேசியா சொற்பொழிவாளர் பாண்டித்துரை, 15-ந் தேதி நெல்லை கண்ணன் ஆகியோர் பேச உள்ளனர். வருகிற 16-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) நிறைவு நாளில் ஐ.எஸ்.ஆர்.ஓ. இயக்குனர் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றுகிறார். இந்த தகவலை மக்கள் சிந்தனை பேரவை தலைவர் ஸ்டாலின் குணசேகரன் தெரிவித்தார்.
    ஈரோடு மாவட்டத்தில் பள்ளி மாணவியை கடத்த முயன்ற மூதாட்டி குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு கருங்கல் பாளையம் காந்திவீதியை சேர்ந்தவர் முருகேசன். இவரது மகள் தனலட்சுமி (வயது 11). அரசு பள்ளியில் 8-ம் வகுப்பு படிக்கிறாள்.

    மாணவி தனலட்சுமியை ஒருமூதாட்டி நைசாக பேசி ஆசைவார்த்தை கூறி அழைத்து வந்தாள். பிறகு அந்த மாணவியை ஈரோடு ரெயில் நிலையத்துக்கு அழைத்து வந்து ரெயிலில் கடத்த முயன்றதாக கூறப்படுகிறது.

    அப்போது ரெயில்நிலையத்தில் ரோந்து பணியில் ஈடுபட்ட ரெயில்வே போலீசாருக்கு அந்த மூதாட்டியின் நடவடிக்கை மீது சந்தேகம் ஏற்பட்டது. தன்னை நோக்கி போலீசார் வந்ததை கண்ட மூதாட்டி மாணவியை விட்டுவிட்டு விறுவிறுவென வேகமாக நடந்து ஓட்டம் பிடித்தார். பிறகு தனியாக விடப்பட்ட மாணவியை போலீசார் மீட்டு விசாரித்து ஈரோடு சைல்டு லைன் நிறுவனத்தில் ஒப்படைத்தனர். அவர்கள் உரிய முறையில் விசாரித்து மாணவியை அவரது பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

    மொடக்குறிச்சி அருகே மொபட்டில் இருந்து தவறி விழுந்தவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    ஈரோடு:

    ஈரோட்டை அடுத்த அவல்பூந்துறை பழனி கவுண்டன் வலசு என்ற இடத்தை சேர்ந்தவர் பொன்னுசாமி (வயது 57).

    இவர் தனது மொபட்டில் பூந்துறைரோடு சக்தி நகர் பிரிவு அருகே சென்று கொண்டு இருந்தார்.

    அப்போது அவர் திடீர் என்று மொபட்டில் இருந்து தடுமாறி கீழே விழுந்தார். இதில் பொன்னுசாமிக்கு தலையில் பலத்த அடிபட்டது

    உடனே அவரை ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து மொடக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    ஓடாநிலையில் நாளை தீரன் சின்னமலை விழாவில் 6 அமைச்சர்கள் பங்கேற்று சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார்கள்.
    ஈரோடு:

    சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலை நினைவு மண்டபம் மற்றும் அவரது சிலை அரச்சலூர் அருகே உள்ள ஓடாநிலையில் உள்ளது.

    ஆடிப்பெருக்கு நாளான நாளை (செவ்வாய்க்கிழமை) அவரது நினைவு நாளையொட்டி தீரன் சிலைக்கு பல்வேறு அமைப்பினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார்கள்.

    தமிழக அமைச்சர்கள் கருப்பணன், எடப்பாடி பழனிச்சாமி, தங்கமணி, வேலுமணி, கடம்பூர் ராஜூ, விஜயபாஸ்கர் ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தீரன் சின்னமலை சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார்கள்.

    இதில் எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள், உள்ளாட்சி தலைவர்கள் உள்பட பலர் கலந்து கொள்கிறார்கள்.

    இதன்பிறகு காலை 10 மணிக்கு அரசு சார்பில் தீரன் சின்னமலை ஆடிப்பெருக்கு விழா கொண்டாடப்படுகிறது. இதற்கு கலெக்டர் பிரபாகர் தலைமை தாங்குகிறார். மாவட்ட வருவாய் அதிகாரி சதீஷ் வரவேற்கிறார்.

    இந்த விழாவில் 6 அமைச்சர்களும் கலந்து கொண்டு பேசுகிறார்கள்.

    அரசியல் கட்சியினர், மற்றும் பல்வேறு அமைப்பை சேர்ந்தவர்கள் தீரன் சின்னமலை சிலைக்கு மாலை அணிவிக்க வருவதால் அசம்பாவித சம்பவம் நடக்காமல் இருக்க ஓடாநிலையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
    நாளை ஆடிப்பெருக்கு விழா: பவானி கூடுதுறையில் புதுமண தம்பதிகள் குவிகிறார்கள். இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது.

    ஈரோடு, ஆக. 1–

    ஒவ்வொரு ஆண்டும் ஆடி 18 அன்று ஆடிப்பெருக்கு விழா வெகு சிறப்பாக கொண்டாடப்படும்.

    குறிப்பாக காவிரி கரை பகுதி மக்கள் ஆடிப்பெருக்கை ஒரு பண்டிகை போல் சிறப் பாக கொண்டாடி மகிழ்வார் கள்.

    இந்த புனித திருவிழா நாளை வழக்கமான உற் சாகத்துடன் கொண்டாடப் படுகிறது.

    மேட்டூர் அணையில் இருந்து பெருக்கெடுத்து வரும் தண்ணீர் இப்போது காவிரி ஆற்றில் இரு கரைகளையும் தொட்டு கொண்டு செல்கிறது. இதனால் இந்த ஆண்டு ஆடிப் பெருக்கு விழா களை கட்டும்.

    ஆடிப்பெருக்கு விழா உற்சாகமாக ஈரோட்டை அடுத்த பவானி கூடுதுறையில் கொண்டாடப்படுகிறது. காவிரி, பவானி, அமுத நதி ஆகிய 3 நதிகள் சங்கமிக்கும் கூடுதுறையில் புனித நீராடி காவிரி தாயை வழிபட்டால் நினைத்தது நடக்கும் என்பது ஐதீகம்.

    இதனால் திருமணமான புதுமண தம்பதிகள் பவானி கூடுதுறையில் கூடுகிறார்கள். திருமண நாளில் கழுத்தில் அணிந்த புது மாலையை காவிரி ஆற்றில் விட்டு, ‘‘எங்கள் வாழ்க்கை இதே போல் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்’’ என வணங்குவார்கள்.

    மேலும் திருமணமான பெண்கள் காவிரி ஆற்றில் பழைய தாலி கயிற்றை விட்டு தங்கள் கணவனால் புது தாலி கயிற்றை அணிவார்கள். இதே போல் மணமாகாத கன்னிப் பெண்கள் தங்க ளுக்கு விரைவில் திருமணம் நடந்து கண்ணுக்கு நிறைஞ்ச மணாளன் அமைய வேண் டும் என வேண்டி கொள் வார்கள்.

    பவானி கூடுதுறைக்கு நாளை ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் குவிவார்கள். என எதிர் பார்க்கப்படுகிறது. இதை யொட்டி பாதுகாப்பு ஏற் பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது.

    பக்தர்கள் நெரிசலில் சிக்காமல் இருக்க தடுப்பு கம்பி வேலிகள் அமைக் கப்பட்டுள்ளது. ஆற்றில் குளிக்கும் போது ஆழமான பகுதிக்கு யாரும் சென்று சிக்கி கொண்டால் அவர்களை காப்பாற்ற ஆற்றில் போலீசார் மற்றும் தீயணைப்பு படையினரும் பரிசல்களில் ரோந்து சுற்ற ஏற்பாடு செய்யப்பட் டுள்ளது.

    ஆடிப்பெருக்கு விழாவை யொட்டி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவகுமார் மேற் பார்வையில் 200–க்கும் மேற் பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

    மேலும் நாளை ஆடி பெருக்கையொட்டி ஆடி அமாவாசை நாளும் சேர்ந்து வருவதால் மிகவும் விசே‌ஷமான நாளாக கருதப்படுகிறது. இதை யொட்டி நாளை கூடுதலாக பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மக்கள் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்கிறார்கள். இதற்கான ஏற்பாடுகளும் பவானி கூடுதுறையில் நடந்து வருகிறது. * * * நாளை ஆடி பெருக்கையொட்டி பவானி கூடுதுறையில் பக்தர்கள் நெரிசல் இன்றி செல்ல தடுப்பு கம்புகள் அமைக்கப்பட்டுள்ள காட்சி.

    தி.மு.க பொருளாளர் மு.க. ஸ்டாலின் ஈரோடு மாவட்டத்தில் இன்றும், நாளையும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்.

    ஈரோடு:

    தி.மு.க பொருளாளர் மு.க. ஸ்டாலின் ஈரோடு மாவட்டத்தில் இன்றும், நாளையும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்.

    இதற்காக அவர் சென்னையில் இருந்து இன்று மாலை விமானம் மூலம் புறப்பட்டு கோவை வருகிறார். பிறகு அங்கிருந்து கார் மூலம் ஈரோடு வருகிறார்.

    ஈரோடு கொங்கு கலையரங்கில் மாற்று கட்சியில் இருந்து பலர் தி.மு.க.வில் சேரும் நிகழ்ச்சி நடக்கிறது. இதில் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டு பேசுகிறார்.

    இதன்பிறகு ஈரோடு பெருந்துறை ரோட்டில் உள்ள சக்தி சுகர்ஸ் விருந்தினர் விடுதியில் அவர் தங்கி ஓய்வு எடுக்கிறார்.

    நாளை (செவ்வாய்க் கிழமை) காலை 8 மணிக்கு தீரன் சின்னமலை நினைவுநாளையொட்டி, ஓடாநிலையில் உள்ள தீரன் சின்னமலைசிலைக்கு மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார்.

    பிறகு எழுமாத்தூர் அருகே உள்ள வெள்ள பெத்தாம் பாளையத்தில் முன்னாள் எம்.எல்.ஏ மு.சின்னசாமியின் நினைவிடத்தில் அவர் அஞ்சலி செலுத்துகிறார்.

    இந்த நிகழ்ச்சிகளை முடித்து விட்டு கார் மூலம் கோவை செல்லும் அவர் பிறகு அங்கிருந்து விமானம் மூலம் சென்னை புறப்பட்டு செல்கிறார்.

    ×