search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தொழிலாளி தூக்குபோட்டு தற்கொலை
    X

    தொழிலாளி தூக்குபோட்டு தற்கொலை

    • கார்த்திகேயன் வீட்டை விட்டு வெளியேறி வீட்டிற்கு அருகே இருந்த மரத்தில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • பங்களாபுதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் கே.என்.பாளையம் நரசபுரம் பகுதியை சேர்ந்தவர் கார்த்திகேயன் (29). இவர் முதல் மனைவியை விட்டு பிரிந்து, கவுதமி என்ற பெண்ணுடன் வாழ்ந்து வந்தார்.

    கார்த்திகேயனுக்கு மதுப்பழக்கம் உள்ளது. இந்நிலையில் கரும்பு வெட்டிய கூலி பணத்தை வாங்கி சம்பவத்தன்று இரவு மது குடித்து விட்டு வீட்டிற்கு வந்துள்ளார்.

    இதையறிந்த கவுதமி, கார்த்திகேயனுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதில் மனவேதனை அடைந்த கார்த்திகேயன் வீட்டை விட்டு வெளியேறி வீட்டிற்கு அருகே இருந்த மரத்தில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்து பங்களாபுதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×