என் மலர்
உள்ளூர் செய்திகள்

அமைச்சர் உதயநிதிக்கு மிரட்டல் விடுத்த சாமியாரை கண்டித்து தி.மு.க.வினர் போராட்டம்
- சாமியாருக்கு எதிராக கோஷங்கள் எழுப்பியதால் அதிர்ச்சி
- உ.பி. சாமியாரின் படங்களை கிழித்தெறிந்து ஆவேசம்
வடவள்ளி,
விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் பேசிய அயோத்தி சாமியாரை கண்டித்து தி.மு.க. கோவை வடக்கு மாவட்டம் தொண்டாமுத்தூர் ஒன்றியம் ஆலாந்துறை நகர செயலாளர் ரங்கசாமி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் சாமியாருக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டன. அப்போது சாமியாரின் படம் கிழித்தெறியப்பட்டது.
போராட்டத்துக்கு பேரூராட்சி தலைவர் ராமமூர்த்த முன்னிலை வகித்தார். கண்டே கவுண்டர், துணைத்தலைவர் மல்லேஸ் என்ற மூர்த்தி, டி.எஸ்.டி. ஆறுமுகம், ஏ.கே.நாகராஜ், இளைஞர் அணி பெருமாள் ராஜ், குருதர்சன், பாபுராஜ், கவுன்சிலர், சாமியப்பன், உதய மூர்த்தி, மு.நாகராஜ், தர்மன், சாந்து, சண்முகராஜன், கவுன்சிலர்கள் மூர்த்தி, முத்து, வினோத் குமார், கவுன்சிலர் அய்யாசாமி லட்சுமி, அமிர்தம் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் என பலர் கலந்து கொண்டனர்.






