என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோவையில் தே.மு.தி.க. கண்டன ஆர்ப்பாட்டம்
- தே.மு.தி.க சார்பில் செஞ்சிலுவை சங்கம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
- தமிழகத்துக்கான காவிரி நதிநீரை கர்நாடக அரசு உடனடியாக வழங்க வேண்டும்
கோவை
கோவை ஒருங்கிணைந்த மாவட்ட தே.மு.தி.க சார்பில் செஞ்சிலுவை சங்கம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் கட்சி நிர்வாகிகள் ஏ.ஆர்இளங்கோவன், செந்தில் குமார், சிங்கை சந்துரு, ஜெகன், சண்முக வடிவேல் உள்பட 100க்கும் மேற்பட்ட தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
அப்போது தி.மு.க அரசு தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதியின்படி அனைத்து பெண்களுக்கும் ரூ.1000 வழங்க வேண்டும், தமிழகத்துக்கான காவிரி நதிநீரை கர்நாடக அரசு உடனடியாக வழங்க வேண்டும், விளை நிலங்க ளை அழிப்பதை என்எல்சி நிர்வாகம் கைவிட வேண்டும் என்பதை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.
Next Story






