search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கடலூர் அருகே தீபாவளி சீட்டு நடத்தி பண மோசடி: பணத்தை திருப்பி கேட்ட பெண்களுக்கு கொலை மிரட்டல்
    X

    கடலூர் அருகே தீபாவளி சீட்டு நடத்தி பண மோசடி: பணத்தை திருப்பி கேட்ட பெண்களுக்கு கொலை மிரட்டல்

    • தீபாவளி சீட்டு பணம் கட்டியதற்குண்டான பொருட்களை வனிதா வழங்கவில்லை.
    • ரம்யாவை ரூபன் மானபங்கம் படுத்தியதாக கூறப்படுகிறது.

    கடலூர்:

    கடலூர் தேவனாம்பட்டினத்தை சேர்ந்தவர் வனிதா. இவரிடம் கடலூர் சொத்திக்குப்பத்தை சேர்ந்த ரம்யா, ராணி ஆகியோர் கடந்த 2022-ம் ஆண்டு தீபாவளி சீட்டு கட்டியுள்ளனர். தீபாவளி சீட்டு பணம் கட்டியதற்குண்டான பொருட்களை வனிதா வழங்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் ரம்யா, ராணி ஆகியோர், தங்கள் கட்டிய பணத்தை வனிதாவிடம் கேட்டனர். அப்போது அவர்களுக்குள் வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது.

    இந்நிலையில் சம்பவத்தன்று ரம்யா, ராணி ஆகியோர் பணத்தைக் கேட்டு வனிதாவிடம் மீண்டும் சென்றனர். அப்போது 2 பேரையும் வனிதா, ரூபன் ஆகியோர் தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். மேலும், ரம்யாவை ரூபன் மானபங்கம் படுத்தியதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த ரம்யா, ராணி ஆகியோர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். இது குறித்து தேவனாம்பட்டினம் போலீசார் வனிதா, ரூபன் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×