என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
கடலூர் அருகே தீபாவளி சீட்டு நடத்தி பண மோசடி: பணத்தை திருப்பி கேட்ட பெண்களுக்கு கொலை மிரட்டல்
- தீபாவளி சீட்டு பணம் கட்டியதற்குண்டான பொருட்களை வனிதா வழங்கவில்லை.
- ரம்யாவை ரூபன் மானபங்கம் படுத்தியதாக கூறப்படுகிறது.
கடலூர்:
கடலூர் தேவனாம்பட்டினத்தை சேர்ந்தவர் வனிதா. இவரிடம் கடலூர் சொத்திக்குப்பத்தை சேர்ந்த ரம்யா, ராணி ஆகியோர் கடந்த 2022-ம் ஆண்டு தீபாவளி சீட்டு கட்டியுள்ளனர். தீபாவளி சீட்டு பணம் கட்டியதற்குண்டான பொருட்களை வனிதா வழங்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் ரம்யா, ராணி ஆகியோர், தங்கள் கட்டிய பணத்தை வனிதாவிடம் கேட்டனர். அப்போது அவர்களுக்குள் வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் சம்பவத்தன்று ரம்யா, ராணி ஆகியோர் பணத்தைக் கேட்டு வனிதாவிடம் மீண்டும் சென்றனர். அப்போது 2 பேரையும் வனிதா, ரூபன் ஆகியோர் தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். மேலும், ரம்யாவை ரூபன் மானபங்கம் படுத்தியதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த ரம்யா, ராணி ஆகியோர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். இது குறித்து தேவனாம்பட்டினம் போலீசார் வனிதா, ரூபன் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்