என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தென்காசியில் மாவட்ட அளவிலான முதல்-அமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகள் - கலெக்டர் தொடங்கி வைத்தார்
    X

    தடகள போட்டியினை கலெக்டர் துரை ரவிச்சந்திரன் தொடங்கி வைத்த காட்சி.

    தென்காசியில் மாவட்ட அளவிலான முதல்-அமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகள் - கலெக்டர் தொடங்கி வைத்தார்

    • தடகள விளையாட்டு போட்டியினை மாவட்ட கலெக்டர் துரை ரவிச்சந்திரன் தொடங்கி வைத்தார்.
    • அனைத்து போட்டிகளிலும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு அதிக அளவிலான பரிசுகளை தென்காசி மாவட்டத்திற்கு பெற்று தரவேண்டும் என கலெக்டர்தெரிவித்தார்.

    தென்காசி:

    தென்காசி இ.சி.ஈஸ்வரன்பிள்ளை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட அளவிலான தமிழ்நாடு முதல்-அமைச்சர் கோப்பை 2022-2023-ம் ஆண்டிற்கான விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது.

    முதல்-அமைச்சர் கோப்பை

    இதில் முதல்கட்டமாக தடகள விளையாட்டு போட்டியினை மாவட்ட கலெக்டர் துரை ரவிச்சந்திரன் தொடங்கி வைத்தார். பின்னர் அவர் தெரிவித்ததாவது:-

    புதிதாக உருவாக்கப்பட்ட தென்காசி மாவட்டத்தில், அனைத்து துறைகளும் வளர்ச்சி பெறுவதற்காக அனைத்து பணிகளும் நடைபெற்று வருகிறது. குறிப்பாக, கல்வி துறையின் மூலம் அனைத்து பள்ளிகளிலும் உள்ள மாணவ, மாணவிகளுக்கு வருகிற பொதுத்தேர்வினை சிறப்பான முறையில் எதிர்கொள்ள தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது.

    இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறையின் மூலம், விளையாட்டு போட்டிகளை ஊக்குவிக்கும் வகையில் 14 பிரிவுகளில் இன்று முதல் தொடங்கி வருகிற 20-ந்தேதி வரை நடைபெற உள்ளது. இப்போட்டியில் வெற்றி பெறும் மாணவ-மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட உள்ளது.

    கலந்து கொண்டவர்கள்

    அனைத்து போட்டிகளிலும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு அதிக அளவிலான பரிசுகளை தென்காசி மாவட்டத்திற்கு பெற்று தரவேண்டும் என தெரிவித்தார்.

    இந்நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.க்கள் பழனிநாடார், ராஜா, சதன்திருமலைக்குமார், முதன்மை கல்வி அலுவலர் கபீர், மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர்நலன் அலுவலர் வினு, மாவட்ட பஞ்சாயத்து தலைவர் தமிழ்செல்வி போஸ், மாவட்ட பஞ்சாயத்து துணைத்தலைவர் உதயகிருஷ்ணன், தென்காசி நகர்மன்ற தலைவர் சாதிர், துணைத்தலைவர் கே.என்.எல்.சுப்பையா, தென்காசி யூனியன் சேர்மன் சேக்அப்துல்லா, துணைத்தலைவர் கனகராஜ் முத்துப்பாண்டியன், ஒன்றிய கவுன்சிலர் பரமகுரு, இ.சி.ஈ.அரசு ஆண்கள் மாதிரி மேல்நிலைப்பள்ளி தலைமை யாசிரியர் செந்தூர்பாண்டி, உடற்கல்வி ஆசிரியர்கள், ஆசிரியைகள், பல்வேறு விளையாட்டு சங்கங்களின் தலைவர்கள், செயலாளர்கள், அரசு அலுவலர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×