search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மொய் விருந்தில் தகராறு; 2 பேர் கைது
    X

    மொய் விருந்தில் தகராறு; 2 பேர் கைது

    • விழாவில ஆட்டுக்கறி உள்ளிட்ட அசைவ உணவு பரிமாறப்பட்டது.
    • தடுக்க வந்த சிலரை தாக்கியதாக கூறப்படுகிறது.

    திருவோணம்:

    தஞ்சாவூர் மாவட்டம் திருவோணம் அருகே வாட்டாத்திக்கோட்டை கொள்ளைக்காடு பகுதியை சேர்ந்த நான்கு நபர்களாக ஒன்று சேர்ந்து, அப்பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் மொய் விருந்தோடு, காதணி விழாவும் நடத்தியுள்ளனர்.

    மொய் விருந்தில் கலந்துக்கொண்டவர்களுக்கு ஆட்டுக்கறி உள்ளிட்ட அசைவ உணவு பரிமாறப்பட்டது.

    இந்நிலையில், மொய் விருந்தில் சாப்பிட வந்த நெய்வேலியை சேர்ந்த ஆறுமுகம் (வயது26), குமரேசன்,(27), இருவரும் கூடுதலாக ஆட்டுக்கறி கேட்டு தகராறு செய்துள்ளனர்.

    அங்கிருந்தவர்கள் அவர்களை சமாதானம் செய்ய முயன்றுள்ளனர்.

    இருப்பினும் ஆறுமுகம், குமரேசன் இருவரும் அங்கிருந்த நாற்காலியை துாக்கி வீசி ரகளை செய்ததாக கூறப்படுகிறது,

    அங்கிருந்த வேலம்பட்டியை சேர்ந்த சுரேஷ் என்பவர் சமாதானம் செய்ய முயன்றுள்ளர்.

    ஆனால், ஆறுமுகம், குமரேசன் இருவரும் அங்கிருந்த கல்லால் சுரேஷை தாக்கியுள்ளனர்.

    இதை தடுக்க வந்த சிலரையும் கண் மூடித்தனமாக தாக்கியதாக கூறப்படுகிறது.

    இதில் சுரேஷின் வலது கண் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது.

    இது குறித்து வாட்டாத்திக்கோட்டை போலீசில் மொய் விருந்து நடத்தியவர்கள் புகார் அளித்தனர்.

    புகாரின் பேரில், போலீசார் ஆறுமுகம், குமரேசன், இருவரையும் நேற்று கைது செய்தனர் மொய் விருந்து நிகழ்ச்சியில் இரண்டு வாலிபர்கள் ரகளையில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது,

    Next Story
    ×