என் மலர்
உள்ளூர் செய்திகள்

அன்னூர் அருகே டிரைவருக்கு கொலைமிரட்டல்
- மனோஜ் அன்னதாசம்பாளையம் பகுதியை சேர்ந்த வெங்கிட்டான் என்பவரது தோட்டத்தில் டிராக்டர் ஓட்டியுள்ளார்.
- கார்த்திக் மற்றும் அவரது நண்பர் தாமோதரன் ஆகியோர் சேர்ந்து மனோஜை தாக்கினர்.
அன்னூர்,
கோவை மாவட்டம், அன்னூரை அடுத்துள்ள கஞ்சப்பள்ளி நத்தமேட்டுத்தோட்டத்தை சேர்ந்தவர் மனோஜ்(32). இவர் டிராக்டர் வைத்து வாடகைக்கு ஓட்டி வருகிறார்.
மனோஜ் அன்னதாசம்பாளையம் பகுதியை சேர்ந்த வெங்கிட்டான் என்பவரது தோட்டத்தில் டிராக்டர் ஓட்டியுள்ளார். இதற்கான வாடகை பணத்தை அவரிடம் கேட்டார். அப்போது அவர்கள், நீங்கள் கூறியதாக கார்த்திக் என்பவர் வந்து பணத்தை பெற்று சென்றதாக தெரிவித்தனர்.
இதையடுத்து மனோஜ் மற்றும் வெங்கிட்டான், அவரது மனைவி துளசியம்மாள் ஆகியோர் கார்த்திக்கை நேரில் சந்தித்து இதுகுறித்து கேட்டனர்.
அப்போது கார்த்திக் மற்றும் அவரது நண்பர் தாமோதரன் ஆகியோர் சேர்ந்து மனோஜை தாக்கினர். மேலும் அவருக்கு கொலைமிரட்டலும் விடுத்தனர். இதுகுறித்து மனோஜ் அன்னூர் போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து கார்த்திக், தாமோதரன் உள்ளிட்ட 2 பேரையும் கைது செய்தனர்.பின்னர் அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.






