search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோவையில் மாநகராட்சி ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் 2-வது நாளாக போராட்டம்
    X

    கோவையில் மாநகராட்சி ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் 2-வது நாளாக போராட்டம்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • சம்பள உயர்வு, பணி நிரந்தரம் கோரி தர்ணா
    • கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டம் தொடருமென அறிவிப்பு

    கோவை,

    கோவை மாநகராட்சியில் 100 வார்டுகள் உள்ளன. இந்த வார்டுகளில் சேகரமா கும் குப்பைகளை அகற்று வது உள்ளிட்ட பணிகளில் தூய்மை பணியாளர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இதில் நிரந்தர தூய்மை பணியாளர்கள் மட்டுமின்றி, ஒப்பந்த தூய்மை பணியா ளர்களும் பணியாற்றி வருகின்றனர். அதன்படி ஒப்பந்த தூய்மை பணியா ளர்கள் 2,500க்கும் மேற் பட்டோர் உள்ளனர்.

    அவர்கள் தங்களை பணி நிரந்தரம் செய்ய கோரியும், கலெக்டர் அறிவித்த ரூ.721 சம்பள உயர்வை வழங்க கோரியும் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

    இதன் ஒரு பகுதியாக நேற்று காலையில் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் வேலையை புறக்கணித்து கோவை அவினாசி சாலை யில் உள்ள வ.உ.சி மைதா னத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    தூய்மை பணியாளர்கள் போராட்டத்தை அடுத்து, அவர்களுடன் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் இரவில் பேச்சுவார்த்தை நடத்தப் பட்டது.

    ஆனால் இந்த பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. இதைய டுத்து இன்று 2-வது நாளாக ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் பணியை புறக்கணித்து தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    போராட்டத்திற்கு கோவை மாவட்ட தூய்மை பணியாளர் உரிமை மீட்பு கூட்டு இயக்க தலைவர் தமிழ்நாடு செல்வம், தூய்மை பணியாளர்கள் வாழ்வுரிமையை மீட்டெ டுக்கும் சங்கங்களின் கூட்ட மைப்பின் தலைவர் வினோத் தலைமை தாங்கி னர்.

    போராட்டத்தில் ஈடு பட்ட தூய்மை பணியா ளர்கள் தங்களது கோரிக் கைளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். இதுகுறித்து தூய்மை பணியாளர்கள் கூறியதா வது:-

    பணிக்கு சேர்ந்து 10 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வரும் தூய்மை பணியாளர்களை நிரந்தர தூய்மை பணியாளர்களாக மாற்ற கோரிக்கை விடுத் தோம்.

    ஆனால் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. மேலும் சம்பள உயர்வு கேட்டோம். கலெக்டர் ரூ.721 சம்பளம் நிர்ண யித்தார். அதை கூட இது வரை எங்களுக்கு வழங்க வில்லை.

    எனவே நேற்றுமுதல் காலவரையற்ற காத்திருப்பு போராட்டத்தை தொடங்கி உள்ளோம்.

    நேற்று அதிகாரிகள் எங்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அதில் உடன்பாடு ஏற்படாத காரணத்தால் இன்று 2-வது நாளாக தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். எங்களது கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டம் தொட ரும்.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    இந்த போராட்டத்தின் காரணமாக வ.உ.சி.மைதானத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஒப்பந்த தூய்மை பணி யாளர்கள் போராட்டத்தால் மாநகரில் குப்பைகள் தேங்கும் நிலை உருவாகி யுள்ளது. இருந்தபோதிலும் மாநகராட்சி நிர்வாகத்தினர், நிரந்தர தூய்மை பணியா ளர்களை கொண்டு மாந கரில் குப்பைகள் தேங்கா தவாறு பணிகளை மேற் கொண்டு வருகின்றனர்.

    Next Story
    ×