search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அன்னூர் அருகே  ரூ.15 ஆயிரம் மதிப்பிலான காப்பர் வயர்கள் திருட்டு
    X

    அன்னூர் அருகே ரூ.15 ஆயிரம் மதிப்பிலான காப்பர் வயர்கள் திருட்டு

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஊராட்சி தலைவர் காயத்திரி பாலகிருஷ்ணன் அன்னூர் போலீசில் புகார் அளித்தார்.
    • கடந்த 1 மாதங்களுக்கு முன்பு இதே பகுதியில் காப்பர் ஒயர்கள் திருடி சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

    மேட்டுப்பாளையம்,

    அன்னூர் அருகே காட்டம்பட்டி ஊராட்சியில் மொத்தம் 9 வார்டுகள் உள்ளது.

    இதில் பொதுமக்களின் குடிநீர் தேவைக்காக ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் கிணற்றின் மூலம் தண்ணீர் எடுத்தும் பொதுமக்களுக்கு வழங்கப்படுகிறது.

    இதனிடையே ஊராட்சிக்குட்பட்ட வரதயம்பாளையம் செங்காடு, காட்டம்பட்டி குளம், ரோஜா நகர், முதலிபாளையம் பட்டத்தரசி அம்மன் கோயில், கடத்தூர் ஆகிய இடங்களில் ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்ட இடம், கிணறு ஆகிய பகுதிகளில் மின் மோட்டாகளில் இருந்து காப்பர் வயர்களை மர்ம நபர்கள் வெட்டி திருடி எடுத்து சென்றனர்.

    இதனை பார்த்த அப்பகுதியினர் ஊராட்சி நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு ஊராட்சி தலைவர் காயத்திரி பாலகிருஷ்ணன், வார்டு உறுப்பி னர் லட்சுமிகாந்த் மற்றும் அன்னூர் போலீசார் நேரில் வந்து ஆய்வு செய்தனர்.

    அப்போது ரூ.15 ஆயிரம் மதிப்புள்ள காப்பர் ஒயர்கள் திருடு போனது கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பாக ஊராட்சி தலைவர் காயத்திரி பாலகிருஷ்ணன் அன்னூர் போலீசில் புகார் அளித்தார்.

    இதையடுத்து அன்னூர் போலீசார் இப்பகுதியி லுள்ள சி.சி.டி.வி கண்கா ணிப்பு காமிராக்கள் மூலம் விசாரணை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே கடந்த 1 மாதங்களுக்கு முன்பு இதே பகுதியில் காப்பர் ஒயர்கள் திருடி சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×