என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விருத்தாசலத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
    X

    விருத்தாசலத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

    விருத்தாசலத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

    கடலூர்:

    எல்.ஐ.சி., எஸ்.பி.ஐ., மற்றும் பிற தேசிய மயமாக்கப்பட்ட வங்கி களை முதலீடு செய்ய நிர்ப்பந்தித்தது குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும், முதலீட்டாளர்களை பாதுகாக்க சரியான நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என காங்கிரஸ் அறிவித்திருந்தது.

    அதன்படி கடலூர் மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவரும் விருத்தாசலம் எம்.எல்.ஏ.வுமான ராதா கிருஷ்ணன் தலைமை யில் விருத்தாசலத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது. கடலூர் ரோட்டில் அமைந்துள்ள எஸ்.பி.ஐ., வங்கி கிளை முன் நடந்த ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் தொண்டர்கள் பங்கேற்று கோரிக்கைகளை வலியுறுத்தியும், மத்திய அரசை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர்.

    Next Story
    ×