search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பொள்ளாச்சி அருகே ஓடும் பஸ்சில் பள்ளி மாணவிகளிடம் சில்மிஷம் செய்த கண்டக்டர்
    X

    பொள்ளாச்சி அருகே ஓடும் பஸ்சில் பள்ளி மாணவிகளிடம் சில்மிஷம் செய்த கண்டக்டர்

    • இது குறித்து 4 மாணவிகள் அவர்களது பெற்றோர்களிடம் தெரிவித்தனர்.
    • மாணவிகளின் பெற்றோர் மற்றும் பொதுமக்கள் அரசு பஸ்சை சிறை பிடித்து போராட்டம் நடத்தினர்.

    கோவை,

    கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் இருந்து தங்கம் தியேட்டர், கோட்டாம்பட்டி பிரிவு, வக்கம்பாளையம், கருப்பம்பாளையம், சிங்காநல்லூர், சீனிவாசபுரம், குஞ்சுபாளையம் வழியாக பொள்ளாச்சிக்கு அரசு பஸ் இயக்கப்படுகிறது. இந்த பஸ்சில் ஆனைமலையை சேர்ந்த 57 வயது நபர் கண்டக்டராக வேலை பார்த்து வருகிறார்.

    பொள்ளாச்சி சிங்காநல்லூர் அரசு பள்ளியில் படிக்கும் மாணவ- மாணவிகள் அந்த பஸ்சில் தினமும் பள்ளிக்கு சென்று வந்தனர்.மாணவிகள் பயணிக்கும் போது கண்டக்டர், மாணவிகளிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டு ஒருமையில் பேசியதாக கூறப்படுகிறது. இது குறித்து 4 மாணவிகள் அவர்களது பெற்றோர்களிடம் தெரிவித்தனர்.

    சம்பவத்தன்று பஸ் ஜமீன்கொட்டாம் பட்டி அருகே சென்று கொண்டு இருந்தது. அப்போது மாணவிகளின் பெற்றோர் மற்றும் பொதுமக்கள் அரசு பஸ்சை சிறை பிடித்து போராட்டம் நடத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இந்த தகவல் கிடைத்ததும் கோட்டூர் போலீசர் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்றனர்.

    பின்னர் மாணவிகளின் பெற்றோர் மற்றும் பொதுமக்களிடம் கண்டக்டர் மீது நடவடிக்கை எடுப்பதாக கூறி பேச்சு வார்த்தை நடத்தினர். இதனையடுத்து போலீசார் சிறை பிடிக்கப்பட்ட பஸ்சை போலீஸ் நிலையத்துக்கு எடுத்து சென்றனர். இது குறித்து போலீசார் மாணவிகள் மற்றும் கண்டக்டரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×